கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆனைக்(ஐராவதம்)கால் மேய்ந்த்திட,ஆவினம் போலாக
மோனைகோன் இந்திரன் மன்னிப்பு , -ஓணத்தோன்
உம்பர்கோன் பட்டத்து உச்சைஸ்வ ரஸ்பூண்டார்
நம்பிய ’ஆ’வுக்(கு)உபேந்(த்ர்) ‘ஆ’(உபேந்த்ரா)’’….கிரேசி மோகன்….!
கண்ணன் எதுகை(யதுகை),பின்செல்லும் ஆயிரம்கண்ணன்(இந்த்ரனுக்கு உடம்பெல்லாம் கண்) அண்டர்கோன் மோனை (அல்லது) கேணை…..!
”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
மர்மமே கண்ணனாய் மால்’’…!