பாதுகாப்பற்ற காப்பகங்கள்?
பவள சங்கரி
தலையங்கம்
இந்தியாவிலுள்ள மொத்த 2874 குழந்தைகள் காப்பகங்களில் 54 காப்பகங்கள் மட்டும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லம் போன்றவைகள் ஒற்றை இலக்கத்தில் உள்ளவைகளே குழந்தைகள் முழுமையான பாதுகாப்புடன் வாழ்வதற்குரிய அனைத்து ஆவணங்கள் வைத்துள்ளனர் என்று உச்சநீதி மன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை தேசிய ஆணையம் (NCPCR) அறிவித்துள்ளது வேதனைக்குரியது. ஒழுங்கான கணக்கு, வழக்குகள் வைத்திருந்தாலே பீகாரில் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயமரான நிகழ்வுகள் ஏற்படாது என்றும் காப்பகங்கள் பற்றி யாருக்கும் எந்த விதமான அக்கறையும் இல்லை என்றும், இது குறித்து நீதி மன்றமே கையறு நிலையில் உள்ளது என்றும் உச்சநீதி மன்ற நீதிபதி லோகூர் அவர்கள் வாய் மொழியாகத் தெரிவித்துள்ளார் .. 🙁