கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

’’அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
காட்டிய கேசவ் கவி”….!
மந்தாகினி -ஆகாஸகங்கை….!
“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!