புவிசார் விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!
பவள சங்கரி
இமாலயப் பிரதேசத்தில் 8.5 ரிக்டர் அளவிலும், அதற்கு மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இதன் பாதிப்பு தெற்கு நேபாளம், வடக்கு இமாலயப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று பங்களூரு நேரு புவியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளனர். நமது இசுரோ விண்வெளி ஆய்வுக்கோள் அனுப்பியுள்ள புகைப்படங்களிலிருந்து ஆய்வு செய்து இதனை அறிவித்துள்ளனர். சுமார் 600/700 ஆண்டுகளாக இதுவரை எந்தவிதமான பாதிப்புகளும் இந்தப்பகுதிகளில் ஏற்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை இது என்றும் இதன் பாதிப்பு வெகு விரைவில் தெரியும் என்றும் இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இதன் பின் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும். இதன் பாதிப்புகள் சத்தீசுகர்,பீகார், தில்லி, இமாச்சலப் பிரதேசம்,நேபால்,மேற்கு வங்கம் வரை பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள்.