பசியின் வலி
– ஏறன் சிவா
பசிக்குப் படையல் படைத்திங்குப்
பண்பைக் காத்தார் நம்முன்னோர்
புசிக்கும் சோறும் பொய்யாகப்
புவியில் மாறிப் போனதன்றோ?
பசுவும் நெகிழிப் பை..தின்னல்
பார்க்க நெஞ்சம் பதைக்கிறதே!
இசையும் மனமும் இருக்கிறதே
இனியும் பொறுக்க மறுக்கிறதே!
02/04/2018