-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

ஆழ்துளைக்குள் அழுகையொலி
அனைவரையும் உலுக்கியதே!
வாழவெண்ணி வந்தவுயிர்
ஆழத்துள் அடங்கியதே!

ஓலமிட்டு அழுதவர்கள்
ஓடியோடி அலைந்தவர்கள்
நாளைவரும் எனநினைத்தார்
ஆழ்துளையோ விடவிலையே!

தண்ணீரைத் தேடினோர்க்குக்
கண்ணீரே மிச்சமெனப்
பிஞ்சுக் குழந்தையொன்று
பேதலிக்க வைத்ததுவே!

கெஞ்சினார் கிண்டினார்
கேட்கவில்லை இறைவனுக்கு
பிஞ்சுக் குழந்தை உயிர்
பிரியும்நிலை ஆனதே!

பெற்றாரின் தவறா?
பேணி நிற்கும்
பேரரசின் தவறா?

கற்றாரின் தவறா?
கடவுளின் தவறா?
யார்தவறோ அறியோம்!
பிஞ்சின் அழுகை மட்டும்
நெஞ்சலாம் ஒலிக்கிறதே!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *