சி. ஜெயபாரதன், கனடா

புலி வருது ! புலி வருது !!
புலி வருதென
அலறி
அலை அலையாய்
எழுந்தார்
விழித்துக் கொண்டு !
இப்போது
புலி வந்திருச்சி !!!
உயிருக்குப் பயந்தோர்  எல்லாம்
ஓடி வாரீர் !
தலை வைப்பீர்
என் மீது !
எதையும் தாங்கும் இதயம்
எனக்கு !
வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ
காட்சி அளித்தார்
எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி !
நாடாளும் மன்றம்
ஆடாமல், குறட்டை விட்டு
உறங்குது !
பிரதம மந்திரி தெருவில் நின்று
மக்களுக்கு
மூக்கு வாய் மூடக்
சுவாசக் கவசம்  கொடுத்தார் !
வீட்டில்  அடைபட்டு
நாட்டு மாந்தர்
ஊழிய மின்றி, ஊதியம் இழந்து,
உணவுத் தானியம்
காலியாகி
கை கட்டி நின்றார்
கண்ணீரை
டையில் துடைத்துக் கொண்டு !
வயல்களில்
காத்துக் கிடக்கும் பசுமையாய்
காய்கறிகள், கனிகள்
எடுப்பாரின்றி !
மூலையில் எடுத்த கிழங்குகள்
குவித்துக் கிடக்கும்
வாகனத்தில்
ஏற்றிக்
கொடுப்பாரின்றி !
சுவாசக் கருவிகள்,
மூக்கு வாய் கவசங்கள்
தைத்து
மலிவாய்ச் செய்ய
ஈபாடில்
இன்றுதான் ஆர்டர்
சைனாவுக்குப் போய்
உள்ளது !
நெடுதொலைக் குகையின்
முடிவில்
வெளிச்சம் தோன்றுமா ?
சந்திர னுக்குச் சென்று மீண்ட
விண்சிமிழ் செய்யும்
வல்லரசுகள் கைவசம் இப்போ
யந்திரம் இல்லை !
செய்யும் திறம்,
தொழில் நுணுக்கம் இல்லை !
கோடான கோடி
வல்லரசு நிபுணர்கள்
டைகட்டி, கைகட்டி
வாய் மூடி
எதுவும் செய்ய இயலாது
சைனா
வேதாளத்தின்
பாதத்திலே கிடக்கிறார்
பாரீர் ! பாரீர் !
பாரீர் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *