சி. ஜெயபாரதன், கனடா

கொடிது, கொடிது
தனிமை கொடியது
ஏகாந்தம் இனியது  முனிவருக்கு
பத்துக் கட்டளை
மோசசுக்கு!
பைபிள் படைத்த
ஏசுவுக்கு,
மனை மாதைக்
கைவிட்ட
போதி மரப் புத்தருக்கு.
ஆண்பெண்
புறக்கணிப்பு மிக, மிகக்
கொடியது
அதிலும் உச்சம்
முதுமையில்  துணை இழப்பு.

நீயும் தனி,
நானும் தனி,
அயோத்தியை ஆண்ட
ராமனும் தனி,
ராவணனைக் கொன்று மீட்ட
சீதையும் தனி !
வாழ நினைத்தாள்
வைதேகி !
வனத்தில் விடப் பட்டாள்.
நினைத்துப் பார்த்தால்,
மண்ணில்
அனைவரும் தனி.
அற்று விழும் கிளைகளை
ஒட்டு மாங்கனி
ஆக்கு.
வையத்தில் வாழ நினைக்கும்
இணக்க முள்ள
ஆண் பெண் முதியவரை
பிணைத்துவிடு இனி.
தென்றலில் ஆடும் கொடிகள்
ஒன்றின் மீது ஒன்று
படர்ந்து கொள்ளட்டும்.
சில நாட்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *