என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல்

0

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை நிர்மலா ராகவன் ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்னதாகக் குஷ்வந்த் சிங், நிர்மலா ராகவனை ஒரு மணிநேரம் நேர்காணல் செய்தார். இந்தியர்களுக்குத் தங்கள் தாய்மொழியை விட, ஆங்கிலமே நன்றாக வரும் எனக் குஷ்வந்த் சிங் மேடையில் சொல்ல, நிர்மலா ராகவனும் மேடைக்குச் சென்று, நானும் இந்தியாவிலிருந்து வந்தவள்தான். எனக்கு ஆங்கிலத்தை விட, தமிழே நன்றாக வரும் எனக் கூறினார். மறு பிறவி இல்லை என்று குஷ்வந்த் சிங் சொல்ல,  அப்படியானால் ஒருவர் ஏழையாகவும் இன்னொருவர் பணக்காரராகவும் பிறப்பது எப்படி? கர்ம வினைதானே அதற்குக் காரணம்? எனக் கேட்டுள்ளார்.

எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உடனான தம் உரையாடல்கள், அவருடன் மேற்கொண்ட பயணம், குஷ்வந்த் சிங் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்கள் ஆகியவற்றை நிர்மலா ராகவன், இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *