Tag: பவள சங்கரி திருநாவுக்கரசு

  • YOU MADE IT!!!

    Pavala Sankari

     

    Becareful with my heartheart
    as it pains much due
    wired with confusions
    win-now from partition thorns

     

    Neednot be worried
    Of yours being in a pool
    Full of lilly blossoms
    Embosomed with Cool breeze

     

    Blushing bluebell glancing down
    sizzling cute butterflies
    buzzing bees on the lily
    drizzling droplets of honey

     

    knowing not to harm his
    eternal peace of silence
    splayed his hypnotic wing
    Of multicolours to make it sing.

     

    final fling of warmth of sun
    reddened bright as the dawn
    warming hum of nightingale
    saved the soul of friendship!!

     

    as the geese fly across the sea
    as you never come downtoearth
    as you don’t have wings or limbs
    as you are my dream ever!!!!

     

     

    Thanks for the image:

    http://data2.whicdn.com/images/88991863/large.jpg

    Share
  • வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு

    Manavaalan.pmd

    ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ரூ.100 விலையுள்ள இந்த நூல், கிடைக்குமிடம்:

    தாரிணி பதிப்பகம்,
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்,
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை,
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com

    என்னுரை

     ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்திருக்கும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி இனிதாக முடிந்திருக்கிறது. . நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிக அவசியமாகிறது. தமிழ் சிறுகதை இலக்கியங்களின் வளர்ச்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஐக்கியா டிரஸ்ட் நிறுவனர் திரு வையவன் அவர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வந்திருக்கும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.  ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி மாதாமாதம், பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் மாதப்பரிசு பெற்ற அனைத்துக் கதைகளையும் பொறுமையாக வாசித்து அதிலிருந்து பரிசுக்குரிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து கதைகளுக்கும் அருமையான விமர்சனமும் கொடுத்து எழுத்தாளர்களை மேலும் ஊக்குவித்திருக்கிறார். அவருக்கும் நம்முடைய நன்றியும்,  மனம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

    ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்த சிறுகதைப் போட்டி பல எழுத்தாளர்களை சிறப்பித்திருக்கிறது. இந்த 2013ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள சமகால சிறுகதை எழுத்தாளரான, 82 வயதான கனேடிய எழுத்தாளர் அலைஸ் மன்றோ அவர்கள் மனிதரின் நலிவுற்ற நிலைமைகளையும், தலைமுறை வேறுபாடுகளையும்  மையமாகக்கொண்டு எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய கதைகள் அனைத்தும் தெளிவாகவும், உளவியல்பூர்வமான ஆதாரங்களுடன் இருபதனாலேயே இவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் சபை அறிவித்துள்ளது. 1.24 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறப்போகும் அலைஸ் ஏற்கனவே புக்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வதாகக் கூறும் இவரது  முதல் தொகுப்பான, Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக புனைவுக்கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர் அலைஸ் மன்றோ. அந்த வகையில் நல்ல சிறுகதை இலக்கியங்கள் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு அலைஸ் மன்றோ ஒரு முன்னுதாரணம். தமிழில் நல்ல சிறுகதைகள் நிறைய வரவேண்டும். நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நல்ல சிறுகதைகள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.  இன்று வெற்றி வாகை சூடி நிற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மென்மேலும் உயர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பனிரெண்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி கூறியுள்ள நுணுக்கமான செய்தியை பகிர்ந்து கொள்வது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.

     பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார்  தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார். அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே  சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர்

    வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப்புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது

    புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம். பார்வதி ராமச்சந்திரனின் கதையை இப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.

    மாதவன் இளங்கோவின்  கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல்  போய்விடுவதில்லை. ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும் என்று  ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.

    அதே மனிதப்பண்புகள், தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருப்பது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே.

     மணி ராமலிங்கத்தின் கதை தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத்தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயல்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருப்பங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்ல சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது. – அரவிந்த் சச்சிதானந்தனுக்கு வாழ்த்துகள்.

     சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம்.

     மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். மாறுவதே இல்லை.  சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்து.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    வல்லமை இணைய இதழ்.

    Share
  • DESTINATION

     

     

    Pavala Sankari

    DESTINATION

    Flower-Wallpaper-HD

    why do I adore you?
    Because–
    Endless travel of mind
    To be reached – the destination
    It can never wander hopelessly.

    Because –
    Almighty knows – my
    urgent requirement – worth
    To be settled over – in the
    Wisdom of Destiny!

    Nature never asks – why
    everyone loves Her
    Because
    She knows – the reason
    of her creation – ECSTASY

    Why do I love you?
    Because–
    The bud does not require the Sun
    To answer – why and when she blossoms
    She can never stay as bud for long!

    I believe this sun rises for me
    Only for me – Therefore
    Then – I love Thee
    My Sun rise!

    Pavala

    Share
  • மாறி வரும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றங்கள்

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம்முடைய பொருளாதாரத்தை பெரிதாகப் பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கியமானது அந்நிய முதலீடுகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள். அந்நிய முதலீடுகள், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் முதலீட்டாளர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கையையும் மீறி முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரூபாயின் மதிப்பை ஏற்றுவதும் , இறக்குவதும் அந்த முதலீட்டாளர்களின் கையில் போய்விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் போன்ற அனைத்துப் பொருள்களும் இன்று விலையுயர்ந்து இருப்பதால், பணவீக்கமும் அதிகரித்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, நமது நாட்டில் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் தங்களது வருமானத்திற்குள் அத்தியாவசிய செலவுகளுக்காகக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதால், நுகர்வோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஈடாக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று ரூபாய் 62.57 ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோலியப் பொருட்கள் உபயோகிப்பதை இதுவரை வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு ஆண்டிற்கு மிகச் சாதாரணமாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஊர்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கரைப்பது இந்த பெட்ரோலியப் பொருட்கள்தான் அல்லவா? வாகன உபயோகிப்பின் பெருக்கத்திற்கு ஏற்ப மாற்று பெட்ரோலியப் பொருட்களை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை. இயற்கை எரிவாயுவின் விலை பெட்ரோலைவிட பாதிக்குப் பாதி குறைகிறது. பிரச்சனை இல்லாத வகையில் அந்த இயற்கை எரிவாயுவை உபயோகிப்பதற்கு அதிகமாக ஊக்குவிக்க வேண்டியது அவசியம். நம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவையும் கூட சரியான முறையில் பயன்படுத்தாமல் இருக்கிறோம் நாம். பெட்ரோல் எரிவாயு நகர்ப்புறம் அல்லாத பல இடங்களில் கிடைப்பதில்லை. முதலில் அனைத்துப் பெட்ரோலிய நிலையங்களிலும் இந்த பெட்ரோலிய எரிவாயு கிடைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியம். இரண்டாவதாக 1000 சி.சி வரை உல்லாச உந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் 125 சிசி வரையிலும் இந்த பெட்ரோலிய வாயு உபயோகிப்பதை ஊக்கப்படுத்தலாம். வாகன தயாரிப்புகளிலும் இதை நடைமுறைப்படுத்துவது நலம். இதற்கான ஆய்வரங்கங்களை அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். அந்த ஆய்வரங்கங்கள் பெட்ரோலிய எரிவாயுவை உபயோகப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், அதன் பலனும் முழுமையாக மக்களை சென்று அடையும். இந்த இரு விசயங்களிலும் நம் நிதியமைச்சகமும், பெட்ரோலிய அமைச்சகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் உபயோகிப்பாளருக்கும் அரசாங்கத்திற்கும் மிக மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த சாதனை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    INDIA-SCIENCE-SPACE

    நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ரூ. 450 கோடி செலவில் தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சென்ற 3ம் தேதி (நவம்பர், 2013) காலை 6.08 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தை நெருங்க இந்த செயற்கைக் கோள் 78 கோடி கி.மீ தூரம், அதாவது 15 மாதங்கள் வினாடிக்கு 137 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை, 5-11-2013 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு ,விண்வெளி ஆராய்ச்சியின் பெரும் சாதனையாக அனைத்துலக நாடுகளும் கருதும் இப்பயணம் , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. 25 ராக்கெட் மூலம் கிளம்பியுள்ளது. இது பதினேழாயிரத்து நானூற்றி பதினைந்து கிலோமீட்டரை 44 நிமிடங்களில் கடந்து, பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். சந்திராயன் 1 திட்டத்தின் மூலம், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை ஏற்கனவே இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழுவதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மீத்தேன் என்ற இராசயணப் பொருள் உள்ளதா மற்றும் அதற்கான தட்பவெப்ப நிலை சரியாக உள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்வதே இந்த மங்கள்யான் விண்கலத்தின் முக்கியப் பணி. பூமியைச் சுற்றி வலம் வரும் வகையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு பின், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் சென்று, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அங்கிருந்தபடியே அதன் மேற்பரப்பு முழுவதையும் உளவு பார்த்து தகவல்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும். 300 நாட்கள் இப்பயணம் தொடர்ந்து, 2014 செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கான சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவியிருக்கும், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பட்டியலில் இன்று நம் இந்தியாவும் சேர்ந்திருப்பதும் ஆசியாவிலேயே முதல் நாடு என்ற வகையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருப்பதும் ஒரு இந்தியராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விசயம். எந்த நாட்டின் உதவியும் இன்றி, முற்றிலும் நம் தொழில்நுட்பத்தைக்கொண்டே இவ்வரிய சாதனையை விஞ்ஞானி, கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான நம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செய்திருக்கிறது. இவ்வரிய சாதனையில், அல்லும், பகலும் அயராது உழைத்து வெற்றி கண்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்! இதுவரை 19 விண்கலன்கள் நம் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    INDIA-SCIENCE-SPACE

    நம் தமிழ் நாட்டின், நெல்லை மாவட்டத்தின், நாங்குனேரி வட்டம், கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சுப்பையா அருணன் மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . கோவையில் பி.இ, இயந்திர பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்ற இவர், 1984ம் ஆண்டு இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருடைய தந்தை சுப்பையா அவர்கள் கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரால் நம் தமிழகமே இன்று பெருமை கொள்கிறது. அவருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 1 ஏவுகணையும் இன்று காலை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியான பாலாசோர் அருகேயுள்ள வீலர் தீவில் காலை 9.30 மணியளவில், வங்கக் கடலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதன் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்!

    படங்களுக்கு நன்றி :

    http://news.sky.com/story/1164028/india-mars-probe-mangalyaan-blasts-off

    Share
  • இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்! (2013)

    round

    தீபாவளி தீபாவளிதான்!Ha. Di

    தீபாவளி சிந்தனைகள்

    சிறு வயது குறும்புகள்

    தேடுமிடம்!

     

    அருளுடை அன்னை சாரதா தேவியார்

    Fall colors in Shade’s Mill – Cambridge, Acrylic

    இசைபட வாழ்தல்

    காப்பு 

    நடராஜன்

    குல தெய்வம்

    diwa

    புஜ்ஜியும் பொம்மைகளும்

    நேயம் ம​றைவதில்​லை

    ஓசை

    உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

     

    மனித நேயம்!buss

    கரையாக் காகங்கள்

    அரசியல் தீபாவளி…

    பட்டாசு வெடிக்கலாமா செல்லம்?

    நாக்பூரின் புதிய ஐயப்பன் கோவில்

    யம தீபம்

    ஓய்வு பெறும் ஒரு கிரிக்கெட் சகாப்தம் (ஸச்சின் டெண்டுல்கர்)

    ஜோதிடத்தில் ஐப்பசியின் சிறப்பு!20101106014834_dsc_0842-300x200

     பண்டிகை தந்ததொரு  பாடம் 

     

    தீபநாள் வேண்டுதல்…

     

    தீபாவளி நல்வாழ்த்துகள்

     

    Share
  • இது நிகழாதிருந்திருக்கலாம்

    பவள சங்கரி

    என் பார்வையில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள்

     நூல் பெயர்: இது நிகழாதிருந்திருக்கலாம்

    ஆசிரியர் : ஜி. தமிழ்ச் செல்வி

    பக்கங்கள் : 88

    விலை : ரூ. 80

    வெளியீடு : தாரிணி பதிப்பகம்

    4 ஏ – ரம்யா பிளாட்ஸ்

    32 – 79 காந்தி நகர் 4வது மெயின் ரோடு

    அடையார்

    சென்னை – 600020

    Idhu Nigazhaadhu irundhirukkalam -1

    ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல

    அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ

    கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்

    கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ

    கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்

    கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே

    ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை

    ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே ”

    கவிஞர் வாலியின் உள்ளம் உருக்கும் உன்னத காதல் கவிதை வரிகள்! கண்டதும் காதல், காணாமலே காதல், கண்டும் காணாத காதல், காத்திருப்பில் சுகம் காணும் சோகமான காதல், தோல்வியிலும் துவளாமல் துள்ளி எழும் காதல், பார்த்திருக்க பறந்து செல்லும் கைக்கெட்டா காதல் என்று காதலில் பலவகைகள் அல்லது காதலின் பல முகங்கள் கவிஞர்களின் கற்பனை ஊற்றுக்கு ஒரு வரம்.

    படைப்புகள் ஒரு படைப்பாளியுடன் வாழ்ந்து, பயணித்து, உள்ளுக்குள் ஊடுறுவி, எதைஎதையோத் தேடி, எதையோ காணாததைக் கண்டுபிடித்து,  பிடித்ததை  பூப்போல மென்மையாக அள்ளி அணைத்து சேதாரம் இல்லாமல், தேன்மையிட்டு, வண்ணக் கலவையும், வட்டெழுத்தும் கொண்டு தலைவாழையிலையிட்டுப் பரிமாறிய விருந்தாயின், சுகமாகச் சுவைக்கத் தடையேது?  வார்த்தைகள் கடைவாயில் சிக்கும் கடினமான கற்கண்டாயிராமல், எளிமையாக நுண்மாண் நுழைபுலத்தினுள் புகுந்த கடியாய் இருந்தால் கசக்குமா என்ன?  கண்டதும் பற்றிக் கொள்ளும் மெல்லிய சொற்கள் சுவைகூட்டுவதும் இயல்புதானே! இப்படித்தான் கவிஞர் தமிழ்ச் செல்வியின் இது நிகழாதிருந்திருக்கலாம் நம் தூக்கத்தைத்  தொலைத்துவிடுகிறது! துக்கத்தையும் கூடத்தான்…

    என் காதல் உயிர்

    மலர்ந்தே இருக்க

    பதிவிடுகிறேன்

    என் எழுத்து கல்வெட்டுகளை

    என்று தன் நிலைத்த கனவை, கலையாத கனவுகள் என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கிறார்.

    ‘காதல்’ என்பதே அந்த முதற் பார்வையில் கருவாகி,  முத்தாகி, உள்ளேயே உருண்டு, திரண்டு ஒளிவடிவாய் பிரகாசிப்பதுதானே.  ‘விழிகள் தழுவிய சிலிர்ப்பின்’ முடிவில்

     உன் கவனத்தை

    என் பக்கம் ஈர்க்கவே

    என் கால் கொலுசுகள்

    சப்திக்கிறது.

    அன்புக் காதலின் சின்னமாக கொலுவிருக்கும் இந்தக் கொலுசின் ஓசையால் ஈர்க்கப்படாத காதலன் இந்தப் புவியில் ஏது? அதற்கு இக்கவிஞர் மட்டும் விதிவிலக்கா என்ன?

    தென்றலினும் மென்மையாக

    உன் தீண்டல்

    எங்கோ பார்த்தபடி

    உரசிச் சென்றாய் என்னை!

    முதல் தீண்டலின் சுகானுபவத்தை மூடி மறைக்க வல்லார் யார்?  பார்த்தும் பார்க்காதது போன்றும், தொட்டும் தொடாமலும் உரசும் கள்ளத்தனம் காதலின் இயல்பு  அல்லவா!

    விடியலும் விலகலும்

    ஒருசேர நிகழ

    நீ விலகாமல்

    கலைந்தது உறக்கத்தில்

    முத்த கனவு

    முதல் முத்தம் – கவிஞரின் பெருமூச்சு நம்மையும் சூடேற்றிச் செல்கிறது. காதல் என்றாலே இந்த மெல்லிய சோகம் தானே சுகத்தின் உச்சம்!

    உன் கரங்களின் பிடி

    தந்த இறுக்கத்தில் தான்

    உன் ஆழ்ந்த காதலை

    பரிமாறினாய்

    முதல் அணைப்பின் சுகம் முத்தாய்ப்பாய் நிலைத்திருக்கும் மாயம், கவிஞரின் வார்த்தையில் காவியமாய் ஆகிறது.

    நீ என்னருகில் இருப்பதே

    உலகின் மகிழ்வு எல்லையாகிறது

    விலகாதே எப்பொழுதும்

    ஊடலும், கூடலும் காதலுக்குப் பாடமானாலும், அதட்டலும், அதிகாரமும்கூட இனிமையாகத்தான் இருக்கிறது கவிஞரே!

    உன் மடி என் மஞ்சமாக

    கற்பனையில் திளைக்கிறது

    காதல் மனம்

    காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்றாலும்,

    காதலின் உச்சம்

    நம் மன நிர்வாணம் சமர்ப்பித்தல்

    என்றே சரசமாடுகிறது

    நொடிப் பொழுதும்

    இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும் அந்த ‘சும்மா’வும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? ஆம் வாசகரை பலவாக சிந்திக்க வைக்கிறதே.. இதுதானே இந்த கவிதையின் வெற்றி!

     

    பாதுகாப்பின் உச்சமென

    மிச்சம் இல்லாமல்

    உறுதி சொல்கிறது

    பிணைந்த கரங்கள்

    உயிரோட்டமுள்ள அழகான சொல்லாடல்.

    மௌனகூட்டிற்குள்

    எனக்காக மட்டுமே

    உனக்காக எழுதப்படும்

    மடல் வடிவிது.

    ஒவ்வொரு எழுத்தும்

    அரும்புகளில் மலர்களாக

    குவிந்து விரிவதில்

    எனக்கான உயிர்ப்பின்

    நெகிழ்ச்சி விரிந்து போகிறது.

    விரிந்து போகும் நெகிழ்ச்சியின் உயிர்ப்பு கவிஞரின் ஒவ்வொரு வார்த்தையிலும் மலர்ந்து மணம் பரப்புகிறது.

    உனை காணும் அந்த

    கணம் ஒன்றில்

    என் தேடுதல் முடிந்து

    என் வாழ்வும்

    முற்று பெறும்.

    காத்திருப்பின் சுகமான ரணங்களை சுவையாக விளக்கும் கவிமொழிகள்.

    நாணத்தில் தலைகவிழ

    உன் முகம் மறைந்த நொடியில்

    என்னைப் பற்றியதான

    திட்டல் தொடர்கிறது

    எனக்குள்ளே.

    யதார்த்தத்தின் சுகமான சுமைகளின் நீட்சி.

    நினைத்த மாத்திரத்தில்

    உன் பிம்பத்தை

    வடித்து  விடுகிறது மனம்

     

    இந்த மனிதர்களுக்குத்

    தெரியவில்லை

    காதல் இல்லை

    என்றால் சுரப்பியும்

    நீர்த்துப் போகும் என்று.

    கவிஞரின் கற்பனைக் குதிரை வெகு லாவகமாக வானில் சிறகடித்துப் பறக்கும் அற்புதக் காட்சி!

    எண்ணங்களற்ற மனவெளியில்

    இறக்கைகள் நீட்டி

    பறப்பதான அனுபவம் தான்

    நம் தனிமைத் தகர்ப்பு.

    தனிமையின் தகர்ப்பு இனிமையின் வார்ப்பான வார்த்தை முத்துக்கள்!

    சுமையென்று பாராமல்

    சுமப்பதில் தான்

    ஆழந்த அன்பு

    ஆட்சி செங்கோல்

    ஆகிறது.

    பசுமை மலர்களின்

    ஒவ்வாத  அணிவகுப்பும்

    இசைவான இணைவிற்காக

    இலகுவாக இமைக்கிறது

    உயிர்களின் லீலைகள்.

    கற்பனை வளமிக்க அழகான சொற்குவியல்கள்.

    மௌனங்களும் பேசுகிறது

    மந்திரமாக உள்ளுணர்வை

    வழியாக்கி

    வாசகரையும் தொத்திக்கொள்ளும் கவிஞரின் அனுபவ மொழிகள்.

    தன் பொம்மையை

    பத்திரப்படுத்தும்

    குழந்தையைப் போல

    என்னை பாதுகாப்பதிலேயே

    உன் வாழ்வின் கணங்கள்

    கடந்து போகிறது.

    பெண்மையின் பரிதவிப்பை, எதிர்பார்ப்பை அழகாக எதிரொலிக்கச் செய்யும் சொல்லாடல்கள்.

    விழித்து நிற்கும்

    கவனத்தின் உயிர்ப்பில்

    காதல் மட்டும்

    காதலாக மட்டும்

    வாழ்தல் மட்டும் வாழ்வின்

    அர்த்தம்

    காதல் மட்டுமே வாழ்க்கை, வாழ்க்கையெல்லாம் காதல்மயம் என்று வாழ்வின் அர்த்தமே காதலில்தான் உள்ளது என்பதை  இதைவிட அழுத்தமாகக் கூற இயலாது.

    உணர்வின் உச்சம்

    அழுகையின் மிச்சம்

    கசப்பில் காழ்ப்பும்

    இனிப்பிி்ற்குள் உவர்ப்புமாக

    உருவகக் கூட்டமைப்பில்

    நடிகையாகிறது  மனம்

    பிரிவுத் துயரின் உச்சம், அக்கக்கூவின் சோக கீதங்கள்!

    உன் தோளில் சாய்ந்துறங்கிய போதும்

    காய்ச்சலில் சுருண்டழுத போதும்

    உன் மடியில் துவண்டு கிடந்தபோதும்

    தாயின் ஸ்பரிசத்தை உன்னிடம்

    உணர்ந்தேன்

     உண்மையான காதலின் உச்சம்,  தாய்மைப் பாசத்தைப் பறைசாற்றும்  இன்பம்தான் அல்லவா? அதனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் சொற்கள்.

    உன்னோடு கழித்த நொடி ஏதும்

    உருக்குலையவில்லை  நினைவடுக்குகளில்

    பசுமை  கோர்த்து சிரிக்கிறது

    உயிர்தன்மையின் சிநேகிதத்தில்

    கலையாத கனவுகள்,  முதல் பார்வை,  முதல் தீண்டல், முதல் முத்தம், முதல் அணைப்பு,  விலகாதே  எப்போதும்.. நொடிப் பொழுதும், இணைந்திறுக , பற்றுதல், காதல் கருத்தரிப்பு, உன் நினைவுகள், புறக்கணிப்பு, தனிமைத் தகர்ப்பு, நமக்கான ஊடல், கொந்தளிப்பு,   என  தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதை சொல்கிறது. மொத்தத்தில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள் நாற்பதும் நம்மை காதல் உலகிற்குள் இலவசமாய் இட்டுச் செல்கிறது!

    Share
  • கோல்கேட்டும் மறக்கப்பட்ட இதர ஊழல்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டுக்காக தற்போது சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோரினால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலக்கரித்துறை செயலாளரோ தனக்கு எந்த அளவிற்கு இதில் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு பிரதமருக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். பிர்லா அவர்களோ நான் நிதியமைச்சரை சந்தித்துவிட்டேன், எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். எப்பவும் போல நமது பிரதமர் மௌனமாக இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

    அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே பங்குகொள்ளத் தகுதி பெற்றவையான, ஒடிஸா மாநிலத்தின் தலபிரா நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில், தனியார் நிறுவனமான ஹிண்டாலும் ஒதுக்கீட்டு விண்ணப்பம் பெற்று சேர்க்கப்படுகிறது. அன்றைய செயலர் பி.சி. பரேக், நெய்வேலி நிலக்கரி கழகம் மற்றும் ஹிண்டால் நிறுவனம் என இரண்டும் சேர்ந்து அந்த நிலக்கரிச் சுரங்க வயலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் , பிரதமருக்குத் தெரிந்தே அரசின் கருத்துருவை தயாரித்ததாக பரேக் கூறுகிறார். இப்படி ஒரு மாற்றம் செய்ய வேண்டுமானல் அதனை அரசாணையில் குறிப்பிட வேண்டாமா?
    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், அரசிதழில் வெளியிட்டு அதற்குப் பிறகு விண்ணப்பங்கள் பெற்றுத்தான் ஒதுக்கீடு செய்தார்களா என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    மற்ற தொழிலதிபர்கள் பிர்லாவின் பக்கம் இருந்து கொண்டு இப்படியிருந்தால் நாங்கள் எப்படி முதலீடு செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அம்பானியால் இயற்கை எரிவாய்வு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி சில நாட்கள் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் பரபரப்பாக பேசின. இன்று அதனுடைய நிலை பற்றி ஒரு செய்தியும் தெளிவாக இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு கிணறுகளிலிருந்து சிலவற்றை மட்டும் தயாரித்துவிட்டு மற்றவைகளிலிருந்து எரிவாயு எடுப்பதில்லை. இதனால் உற்பத்தி இழப்பால் பல லட்சம் கோடி நட்டம் ஏற்படுகிறது. இதைத்தவிர அவர் உற்பத்தி செய்வதற்காக வழங்கக்கூடிய விலையும் மிக அதிகமாக உள்ளது. பெட்ரோலியத் துறை இதற்கான எந்த விதமான சரியான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உறுதியான நேர்மையான தலைமை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். இனிமேலும் நேர்மையான ஆட்சியாக இல்லாவிட்டால் இது போன்று பல லட்சம் கோடிகள் போய், கோடி, கோடிகள் நட்டம் ஏற்பட்டு அரசு திவாலாகிவிடும் அபாயம் ஏற்படும். திறமையற்ற நிர்வாகமும் ஏமாறும் மக்களும் இருக்கும் வரை இந்த இந்திய ஜனநாயகம் பிழைக்கும். பிர்லாக்களும், அம்பானிகளும் வாழ்வார்கள். ஆனால் மக்கள் மட்டும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

    ஜெய்ஹிந்த்!

    Share
  • அன்பெனும் சிறைக்குள்……..!

    பவள சங்கரி

     

    AN695G“அன்சார், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. இது சரிவருமா. நம்மால் தனியாக சமாளிக்க முடியுமா? இனிமேல் நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும். நாம் நிறைய நம் சுகங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும்.  இரவு முழுமையான தூக்கம்கூட கேள்விக்குறியாகிவிடும்”

    “அது மட்டுமா டார்லிங்.. நமக்கு இடையில் இன்னொரு ஜீவன் வரும். பல தியாகங்கள்கூட செய்ய வேண்டிவரும், ஆனால் சமாளிக்கலாம் டோனி, ஒன்னும் பிரச்சனை இல்லைடா”

    “இது என்ன சாதாரண விசயமா அன்சார்.  எவ்ளோ பெரிய விசயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்ற, ஏதோ டெக்னிகல் பிராஜக்ட் செய்வது போல. அப்டீல்லாம் கணக்கு போட்டு ஒரு தியரிக்குள்ள செய்யுற பிராஜக்ட் இல்லப்பா இது ”?

    “ஏய், என்னம்மா இது ஊருல உலகத்துல யாரும் செய்யாத ஒன்னை என்னமோ நாம அதிசயமா செய்யிற மாதிரி சொல்றயே..”

    “அட போப்பா, அவங்களுக்கெல்லாம் துணைக்கு அம்மா, அப்பா, மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்காங்க. நாம அப்படியா சொல்லு. நாமதான் ஏதோ உலக மகா தப்பு பண்ணிட்ட மாதிரி ஒதுக்கப்பட்டிருக்கோமே” கண்களில் கண்ணீர் வழிய தொண்டை கம்ம சொன்னாள்.

    “ஹேய்.. ஸ்வீட்டி பை.. என்னது இது. இன்னைக்குப் புதுசா கண்ணிலே தண்ணியெல்லாம்” மார்பினுள் முகம் புதைத்து மெல்லிய விசும்பலுடன் இறுக்கி அணைத்த அவளுடைய கரங்கள் கதைகள் பல சொல்ல, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை உற்று நோக்கியவன் கண்களில் மென்மையாக முத்தமிட்டு, மேலும் அவள் கண்ணீரோ, வாய் வார்த்தையோ தொடராமல் கட்டுப்படுத்தினான்.

    அருகில் பால் மணம் மாறாத குழந்தையைப்போல கபடமற்ற முகத்துடன், தன் கைக்குள் அவள் கையை அடக்க முயற்சித்துக்கொண்டே உறங்கும் தன் அன்பு மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது, தன்னுடைய வம்சம் கிளைவிடப் போகிறது என்ற எண்ணம் குதூகலமாக இருந்தாலும், தான் ஒருவனால் இந்த மாபெரும் காரியத்தை சாதிக்க முடியுமா. குழந்தையை நல்லபடியாக அவள் பெற்று எடுக்கும் வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும், அதைவிட குழந்தையை பராமரிப்பது இன்னும் சிரமம். முதலில் குழந்தையை தூக்குவதற்குப் பழக வேண்டும். டாக்டர் எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும், இருவருக்கும் இத்தனை சொந்த பந்தங்கள் இருந்தும் இது போன்று அனாதையைப் போன்றதொரு வாழ்க்கை அவசியமா என்று சலிப்பாக இருந்தது. ஒரு வேளை தன் அம்மா இருந்திருந்தால் தன்னை புரிந்துகொண்டு இப்படி தவிக்க விட்டிருக்கமாட்டார்களோ என்ற எண்ணம் வந்தபோது கண்ணோடு சேர்ந்து உள்ளமும் கலங்கத்தான் செய்தது. அப்படி என்னதான் தவறு செய்துவிட்டோம் தாங்கள் என்று இன்றுவரை புரியவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தபோது பலமுறை நான் டோனி வீட்டிற்கும், டோனி எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இருவர் வீட்டிலும் அன்பாக நடத்தியவர்கள், எங்களுக்குள் காதல் என்ற அந்த ஒன்று புகுந்தவுடன் நாங்கள் ஏதோ கொலை மாபாதகம் செய்துவிட்டது போல எங்களை வெறுப்புடன் பார்த்தது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், போகப்போக அவர்களை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்று இறுதி வரை நாங்கள் நடத்திய போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது. தூக்கம் பின்னோக்கிய நினைவுகளை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

    சண்டையும், வாக்குவாதமும், போட்டியும், பொறாமையும் என சாதாரணமாக இருந்த நட்புதான் அது. எந்த புள்ளியில் இந்த காதல் மலர்ந்தது என்று புரிந்து கொள்வது எளிதாக இல்லை. இந்த காதல் என்பது ஒரு மலரைப்போல எவரும் அறியாத வண்ணம் , அற்புதமான அந்த ஒரு நொடிப்பொழுதில் எப்படியோ மலர்ந்துவிடுகிறது. மலர்ந்த மறு வினாடியே சுற்றம், சூழல் என்ற எதையுமே சட்டை செய்யாமல் மணம் பரப்பவும் ஆரம்பித்துவிடுகிறது. ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒன்றாக கேம்பஸ் இண்டர்வ்யூவில் முதல் சுற்றிலேயே தேர்வு செய்யப்பட்டு, இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததும், ஒரே பிராஜக்டில் இருந்ததால் முழுவதும் தொடர்பிலேயே இருக்க வேண்டிய நிலை.  அமெரிக்காவிற்கு ஆன்சைட் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்ததும் எல்லாமே எந்த முயற்சியும் இல்லாமல் தானாகவே நடந்ததுதான். அமெரிக்காவில் சென்று அன்சார் தன் நண்பர்களுடன் தங்கவும், டோனி தன் உறவினர் ஒருவர் வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்குவதாகத் திட்டம். கணவன், மனைவி என அவர்கள் இருவர் மட்டுமே வாழ்வதாலும், அது  3 படுக்கையறை வசதி உள்ள அவர்களுடைய சொந்த வீடு என்பதாலும் டோனி அங்கு பேயிங் கெஸ்டாக தங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.  நாட்கள் மாதங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன.

    நீரோட்டம் போல வாழ்க்கை ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தால் எந்த மாற்றமும் வருவதில்லை. ஏதோ சிறு சலனம் ஏற்பட்டாலும்  ஒரு மாற்றம் நிகழத்தான் செய்கிறது. அது பயணத்தின் பாதையை வழிமாற்றவும் கூடும். டோனி தங்கியிருந்த வீட்டின் உறவினர் தம்பதி திடீரென்று இந்தியா செல்ல வேண்டிய அவசர நிலை. டோனிக்கு தனியாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் ஒரு சமயம் தனிமையின் பாரம் அவளை நிலைகுலையச் செய்ததென்னவோ உண்மைதான்.. லேசாக சளி பிடித்திருந்தது ஆரம்பத்தில். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த மாத்திரையை சாப்பிட்டும் சரியாகவில்லை. வீட்டில் தனியாக இருக்கவும் பிடிக்கவில்லை. அப்படியே ஆபீசும் சென்று வந்துகொண்டிருந்தாள். அன்சாரும் உதவி செய்வதாகச் சொல்லியும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தானே சமாளிக்க செய்த முயற்சியும் பலிக்கவில்லை.

    இரண்டு நாட்களாகக் காய்ச்சல் அதிகமாகி அலுவலகம் செல்ல முடியவில்லை. கார் டிரைவிங் சுத்தமாக செய்ய முடியவில்லை. சாப்பிடவும் பிடிக்காமல் சுருண்டு கிடந்தாள். அன்சார் போன் செய்து பார்த்துவிட்டு பதில் இல்லாதலால் சந்தேகப்பட்டு அன்று நேரே அலுவலகத்திலிருந்து அவளைப் பார்க்க வந்தான். காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்க்க பாவமாக இருந்தது. மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியெல்லாம், ‘சாரி, அன்சார். உனக்கு தொந்திரவு கொடுத்துவிட்டேன். ரொம்ப முடியலைப்பா.. அதான்’ என்று புலம்பிக்கொண்டே வந்தாள்.  அவளைச் சமாதானப்படுத்தி ஒரு வழியாக வீட்டில் கொண்டு வந்துவிட்டாலும் ஃபுளூ காய்ச்சல் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் அன்சாரின் உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டதை உணர்ந்து அவனும் சில நாட்கள் அவளுடனேயே தங்கி அவளை கவனித்துக்கொள்ள வேண்டி வந்தது. மனதளவில் இருவரும் நெருங்கி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இது பயன்பட்டது. இந்த நெருக்கம் பாதியில் முடிவதற்காக ஏற்பட்டது அல்ல என்பதையும் வெகு விரைவில் புரிந்து கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல உடல் தேறிவந்த நிலையில் அன்சார் தன் இருப்பிடம் நோக்கிச் செல்ல வேண்டிய நேரம்தான் அவளுக்கு வேதனைக்குரிய நேரமானது. ஒரு நாள்கூட இனி பிரிந்து இருக்க முடியாது என்ற தேவை இருவருக்கும் புரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் இருவரும் உடனடியாக வீட்டில் சொல்லப்போக அங்குதான் பிரச்சனை வெடித்தது. உடனடியாக டோனியின் தாய் கிளம்பி நேராக அமெரிக்கா வந்து சேர்ந்தார். பிறகென்ன மகளை சமாதானப்படுத்தி சொந்தத்தில் வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்ய அவளைச் சம்மதிக்க வைக்க தலைகீழ் நின்று பார்த்தும் அவளுடைய பிடிவாதம் தளர்வதாக இல்லை. வேறு வழியில்லாமல் ஒன்றும் பேசாமல்  இனிமேல் தங்கள் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று வருடம் 2 ஆகியும் இன்றுவரை எந்த தொடர்பும் இல்லை. டோனியே போன் செய்தாலும் யாரும் பேசத் தயாராக இல்லை…  ஆனால் அன்சார் ஒரு படி மேலே சென்று அவர்கள் வீட்டில் இந்த திருமணத்தை மறுத்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் தான் டோனியுடன் சேர்ந்து வாழப்போவதாகவும் சொல்லிவிட்டான். தாயில்லாத மகனை அதற்கு மேல் கண்டிக்க முடியாமல் அவன் தந்தையும் அமைதியாகிவிட்டார். எந்த பிரச்சனையும் இல்லாமல், யாரைப்பற்றியும் கவலையும் படாமல் சந்தோசமாக திருமணம் செய்துகொண்டார்கள்.

    பழைய நினைவுகளில் மூழ்கி வெகுநேரம் தூங்காததால் எழுந்திருக்க கொஞ்சம் சோம்பல்தான்.. அட, டோனியும் இன்னும் எழுதிருக்கவில்லையே. ஆபீசிற்கு கிளம்ப நேரமாகிவிட்டதே என்று மெல்ல டோனியை தட்டி எழுப்பினான்.  முனகிக்கொண்டே எழுந்தவள் முகத்தில் களைப்பு ரேகை இருந்தது. அன்சார் ஒன்றும் பேசாமல் சூடாக ஒரு கப் டீ போட்டு எடுத்துவந்தான். தன் அக்கா இப்படி ஒரு நிலையில் இருந்தபோது மசக்கை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தெரிந்துதான் வைத்திருந்தான். டோனி இரண்டு வாய் டீ குடித்திருப்பாள் அதற்குள் திடீரென்று குடல் புரட்டி அவளையறியாமல் உமட்டிக்கொண்டு வந்தது. அன்சார் சற்றும் தயங்காமல் அப்படியே இரு கைகளையும் நீட்டிப் பிடித்து துளியும் அருவெறுப்பில்லாமல் அருகிலிருந்த வாஷ்பேசினில் போட்டு, கையலம்பிக்கொண்டு, அவளருகில் வந்து பக்கவாட்டில் அணைத்து மெல்ல வாஷ்பேசினருகில் கூட்டிச் சென்று வாய் கொப்பளிக்கச் செய்து முகம் அலம்பி ஒரு குழந்தையைப்போல தன் மார்பில் அவள் தலையை சாய்த்துக்கொண்டு படுக்கையறைக்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தான். டோனியின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். பதறிப்போனவன், ‘என்னடா.. என்ன ஆச்சும்மா..  ஆர் யூ ஓகே.. டியர்?  ஹாஸ்பிடல் எமெர்ஜென்ஸிக்குப் போகலாமா’ என்றான்.

    அவன் பார்வையில் தெரிந்த பரிவும், பாசமும் அவளை மேலும் அலைக்கழித்தது. என்ன மனுசன் இவன்.. சே.. அம்மாவைப் போல இப்படி ஒரு அன்பை ஒருவனால் காட்ட முடியுமா. உள்ளமெல்லாம் பூரித்துப்போக அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள். தாயைப்பிரிந்து இருக்கும் துன்பம் துளியும் அண்டாமல் இவனைத் தவிர யாரால் காக்க முடியும். அவளுடைய அணைப்பின் இறுக்கத்தில் தனக்கும் ஓரளவிற்குப் புரிய, அதே அன்புடன் தலையை தடவிக்கொடுத்து, மெல்ல விடுவித்து படுக்கையில் கிடத்தினான். நேரம் ஓடிக்கொண்டிருப்பதை அவள் துளியும் சட்டை செய்யவில்லை. அவன் கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நகரவிடாமல் கட்டிப்போட்டாள்.

    “ஏய் என்னடா இது.. ஆபீசிற்கு நேரமாகலையா.. போய் கிளம்பணும். நீ வேணுமானா இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ. போன் செய்து சொல்லிடலாம். உனக்கு ஏதாவது கொஞ்சம், ரசம் சாதமாவது செய்து வச்சுட்டுப் போறேன். சரியா…”

    “ம்ம்ம்.. நோ.. வேண்டாம்ப்பா. இன்னைக்கு நீயும் ஆபீஸ் போக வேண்டாம். ப்ளீஸ்.. என்கூடவே இரேன் இன்னைக்கு…” செல்லக் கொஞ்சல்.

    “இல்ல டார்லிங். எனக்கு ஆபீஸ் போகணும் இன்னைக்கு. கிளையண்ட் மீட்டிங்கெல்லாம் இருக்கு. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சீக்கிரம் வரப்பார்க்கிறேன்”

    முடியாது என்று ஒரேயடியாக அடம் பிடித்தாள் என்பதற்காக ஆபீசில் போன் செய்து வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி வாங்கினான். இந்த கணினி யுகத்தில் இது ஒரு பெரிய வரம். எங்கு உட்கார்ந்துகொண்டும் வேலையை கவனிக்க முடிகிறது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. நண்பன் வீட்டில் பாட்லக் பார்ட்டி. வீட்டில் ஏதும் செய்ய முடியாததால் கடையில் சென்று நிறைய நொறுக்குத் தீனிகள் வாங்கிக்கொண்டு சென்று மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையும், கும்மாளமுமாக பொழுது இனிமையாக கழிந்து கொண்டிருந்தது. முதல் நாள்தான் டோனி, ஆறாவது மாதம் என்பதால்  செக்கப்பிற்குச் சென்று ஸ்கேன் பார்த்ததில் பெண் குழந்தை என்று தெரிந்தபோது அன்சாருக்கு ஏகப்பட்ட குஷி. நல்ல வேளை இந்தியாவாக இருந்தால் என்ன குழந்தை என்று கேட்டால் பிய்த்துவிடுவார்கள். அமெரிக்கா என்பதால் தயக்கமில்லாமல் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள முடிந்தது என்ற நிம்மதி. தாயை இழந்து சென்ற 7, 8 ஆண்டுகளாக அனாதையைப் போல மனநிலையில் இருந்தவனுக்கு பெண் குழந்தை என்று சொன்னவுடன் தம் அம்மாவே வந்து பிறக்கப்போவதாக நம்பிக்கை வந்தது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் நண்பன் ரகுவிற்கு வர அவன் ஆரம்பித்த அந்த நொடிதான் எதற்கோ பாதை அமைத்துவிட்டது.

    பெயரைப் பற்றி கேட்டவுடன் சற்றும் தயங்காமல் அன்சார், வஸீமா என்று தன் தாயின் பெயரை சொன்னது டோனிக்கு மகிழ்ச்சியில்லை என்பது அவள் முகம் போன போக்கில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். அன்சாருக்கோ ஆச்சரியமாக இருந்தது, இறந்து போன தன் தாயின் பெயரை வைப்பதில் இவளுக்கு என்ன பிரச்சனை என்று கோபமாகவும் வந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு பல முறை விவாதம் முற்றி சண்டையில்தான் முடிந்தது. இத்தனை நாட்கள் இல்லாத ஈகோ ஏனோ திடீரென்று தலைதூக்கி வீட்டில் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தது. டோனிக்கு தன் பாட்டியின் பெயரை வைக்க வேண்டும் என்பதைவிட அன்சாரின் அம்மாவின் பெயரை வைப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. அன்சார் தங்களுக்கிடையே மதம் என்றுமே ஒரு பிரச்சனையாக வரக்கூடாது என்பதற்காகவே தங்கள் திருமணத்தைக்கூட எந்த மதம் சார்ந்தும் நடத்தக் கூடாது என்று உறுதியாக இருந்தான். இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைக்காத நிலையில் நண்பர்கள் முன்னிலையில், நயாகரா நீர்விழ்ச்சியின் முன் இயற்கை அன்னையை சாட்சியாக வைத்துக்கொண்டு மோதிரம் மாற்றி தங்கள் திருமணத்தை நடத்தியதைக்கூட மறந்துவிட்டாள் இன்று. இந்த நேரத்தில் தேவையில்லாமல் இதைப்பற்றி பேசி அவளை டென்சன் ஆக்க வேண்டாம் என்று அன்சாரும் கூடியவரை விவாதத்தை தவிர்த்து வந்தான். டோனிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் போதும் என்றுதான் இருந்தது அவனுக்கு. டோனி முன்பு தங்கியிருந்த அவளுடைய உறவினரும் இந்தியாவிற்குச் சென்றவர் குடும்பத்தில் பெரியவர்கள் உடல்நிலை மோசமாக இருந்ததால், அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நேரத்தில் எந்த உதவியும் இல்லாமல் நிறை மாத கர்பிணியாக அவள்படும் துன்பத்தைச் சகிக்க முடியாமல் பல நாட்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தான். டோனியும் அடிக்கடி லீவ் போட்டுக் கொண்டுதானிருந்தாள். பிரசவ விடுமுறை கிடைக்க இன்னும் 15 நாட்கள் இருந்த நிலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு தாயுமானவனாக இருக்கும் கணவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் தன்னால் கொஞ்சமும் உதவ முடியாமல் போனதுதான் உண்மை. இன்னும் குழந்தை பிறந்தவுடன் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாகத்தான் இருந்தது. அன்சாரும் அவளுடைய தாய்க்கு பேசி வரவழைக்கச் சொல்லி எத்தனையோ முறை சொல்லியும் அவளுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத பெற்றோரைப் பற்றி தான் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் என்ற ஈகோ.. எப்படியோ சமாளிக்கலாம் என்று வீம்பாக இருந்தாள்.  9 மாதங்கள் ஓடிவிட்டது. டாக்டர் கொடுத்த டியூ டேட் வருவதற்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. ஏனோ அது 15 மாதம் போல இழுத்துக்கொண்டிருந்தது.

    அன்று வெள்ளிக்கிழமை. விடியலிலேயே முழிப்பு வந்துவிட்டது. அன்சார்  சீக்கிரம் எழுந்து குளித்து எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. முதல்நாள் கூட ஒன்றும் சொல்லாமல் இப்படி திடீரென்று எங்கே கிளம்புகிறான் என்று புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்போதுதான் அவள் வந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், சீனாவிலிருந்து ஒரு முக்கியமான க்ளையண்ட் வருவதால் தானே நேரில் சென்று விமான நிலையத்திலிருந்து கூட்டிவர வேண்டும் என்றான். அவளுக்கு ஏனோ திக்கென்றிருந்தது. ஏர்போர்ட் சென்று திரும்ப குறைந்தது 4 மணி நேரமாவது ஆகுமே.. ஏனோ உடம்பும் ஒரு மாதிரி இருப்பதால் தனியாக இருக்க அச்சமாகவும் இருந்தது. அவசரமாகக் கிளம்புபவனை எப்படி நிறுத்துவது என்றும் புரியவில்லை. அன்சாரும் அவள் மன ஓட்டத்தை கொஞ்சமும் சட்டை செய்யாமல் கிளம்பிக் கொண்டிருந்தான். வழக்கம்போல ஈகோ முந்திக் கொள்ள அவனிடம் ஏதும் பேசவில்லை அவள். தன் நிலையைப் பார்த்து அவனே வெளியே போகாமல் கூடவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ அதைக் கண்டுகொள்வதாகவே இல்லை. தன்னையறியாமல் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் குடிகொண்டு மன நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  இனம்புரியாத ஒரு அச்சம் தொடர்ந்துகொண்டே இருந்தது. பிரசவம் பற்றி அனைத்தும் வீடியோவில் பார்த்தும், மருத்துவர் மூலம் அறிந்தும் இருந்தாலும் அந்த நினைவு ஒரு படபடப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஆதரவாய் அள்ளி அணைக்க அன்னைகூட அருகில் இல்லையே என்ற ஏக்கம்தான் அது என்று புரிந்தாலும் இனிமேல் என்ன செய்ய முடியும் என்று நினைத்த போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அன்சார் கிளம்பியவுடன் அமைதியாக போய் கொஞ்சம் பால் சூடு செய்து வெதுவெதுப்பாக குடித்துவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள். அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஏதோ ஒரு இயலாமை தெரிந்தது. அடி வயிற்றில் மெல்ல சுருட்டிப்பிடித்தது. வலி மெல்ல பின்புறமெல்லாம் பரவுவது போல இருந்தது. இன்னும் மருத்துவர் சொன்னதற்கு 15 நாட்கள் இருக்கிறதே.. பிரசவ வலிதான் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லையே. கடவுளே, கர்த்தரே, அன்சார்கூட அருகில் இல்லையே என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்துகொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள். வலி சற்று குறைந்ததுபோல இருந்தது. மெதுவாக நடந்து பார்க்கலாம் என்று மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்தாள். ஒவ்வொரு அடிக்கும் சுள்ளென்றது. திடீரென்று அடி வயிறு இறுகியது போன்று கல்லாட்டம் ஆனது. குழந்தை எந்த அசைவும் இல்லை என்ற கவலை வேறு வந்தது. கொஞ்ச நாட்களாக குழந்தையின் அசைவு நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தது. இன்று என்னமோ அசைவே இல்லாதது இன்னும் அச்சமாக இருந்தது. குழந்தைக்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என்று.  அன்சாருக்கு போன் செய்யலாமா என்று நினைத்தவள் ஏர்போர்ட்டில் இருப்பவனை தொந்திரவு செய்யவும் பிடிக்கவில்லை. என்ன சூழ்நிலையோ என்னமோ என்று யோசனையாக இருந்தது. அப்படியே மெதுவாகச் சென்று மீண்டும் படுத்துக்கொண்டாள். ஆனால் 10 நிமிடத்திற்கு மேல் படுக்கமுடியவில்லை. மீண்டும் பின்புறம் ஒரு குடைச்சலாக வலி ஆரம்பித்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது. போய் தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்தாள். உமட்டிக்கொண்டு வந்தது. வலி பரவுவது நன்கு உணர முடிந்தது. ஏற்கனவே மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல தயாராக வைத்திருந்த பையை எடுத்து வந்து அதில் புதிதாக வாங்கி வந்த மெட்டர்னிட்டி கவுனை உள்ளே வைத்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மெடிகல் கிட் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். வழியில் ஏதும் பிரச்சனை என்றால் தேவையென்று கத்தரிக்கோல் தொப்புள்கொடி கட்டுவதற்கான க்ளிப் போன்ற அனைத்தும் தயாராக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். அன்சார் சென்று 3 மணி நேரம் ஆகிவிட்டது. போன் செய்யலாமா என்று நினைத்தாள். அதற்குள் பாத்ரூம் போக நினைத்தவள், கண்கள் சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது. வலி வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது. ஹை ரப்சர் ஆகிவிட்டது கசகசப்பிலிருந்து புரிந்தது. பனிக்குடம் உடைந்து விட்டது புரிந்தது. இனிமேல் பொறுத்திருப்பது சரியல்ல என்று புரிந்தது. அன்சாருக்கும் போன் செய்தும் அவன் எடுக்கவில்லை. டிரைவிங்கில் இருப்பானோ என்று நினைத்தவள், நண்பர்கள் யாருக்காவது போன் செய்யலாம் என்றால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் இல்லையே  என்று மீண்டும் அன்சாருக்கு போன் செய்துவிட்டு இனி காத்திருப்பது சரியல்ல என்று தானே மருத்துவமனை கிளம்ப முடிவெடுத்தாள். தன் கார் சாவி இருக்கும் இடம் கூட தோன்றவில்லை. பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்…. அன்சாரின் கார் வந்து நிற்கவும் நிம்மதியில் அன்சார் என்று கத்திவிட்டாள். அடுத்த நொடி அன்சார் அதிர்ச்சியுடன் அவள் நிலையைப் பார்த்து இறங்கி ஓடிவந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். எதிரில் நிற்பது யார்… தன் கண்களையே நம்ப முடியாமல் தேய்த்துக்கொண்டு பார்த்தாள்.. ஒன்றும் புரியவில்லை. டோனி என்று வந்து கட்டிக்கொண்ட அம்மாவின் ஸ்பரிசம் சுயநினைவிற்கு கொண்டுவந்தது… தாய்மையின் சுகம் என்ன என்பது பிரசவ காலத்தில்தான் ஒரு பெண்ணிற்கு முழுமையாக உணர முடியும் என்பதெல்லாம் கவிமொழியல்ல.. எல்லாம் சத்தியம் என்பது புரிந்தது. மருத்துவமனையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்காக குழந்தையின் பெயர் கேட்டபோது அன்சார் மௌனமாக நிற்க டோனி கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் வஸீமா என்று முழுமனதுடன் சொன்னபோது அன்சாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கும் என்பது தெரிந்ததுதானே!

    படத்திற்கு நன்றி:

    http://www.inmagine.com/alamy/an695g-photo

    Share
  • வளம் தரும் நாயகியே! வருகவே!

    பவள சங்கரி

    Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple

    பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
    அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
    பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
    நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
    பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
    கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!

    நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
    சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
    சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
    முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
    பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
    பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா

    அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
    கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
    தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
    நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
    பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
    வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா

    ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
    பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

    pbaba097_goddess_lakshmi_parvati_and_saraswati
    வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும் அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின் விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும். மனிதரின் வாழ்க்கை நலமான, கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி சரசுவதி தேவியை வழிபடுகிறோம்.

    பதினென் கரங்களுடன் செவ்வாடை தரித்து ஞானத்தின் பிரதிபிம்பமாக, அழகின் இன்ப ஊற்றாக, அட்ட இலட்சுமியாகக் காட்சியளிப்பவள் அன்னை. 1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம் ஆகியவற்றை 18 ஆயுதங்களையும் அன்னையின் 18 திருக்கரங்கள் தாங்கி நிற்கிறது. வெள்ளை ஆந்தையை வாகனமாகக் கொண்டவள். 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி என அட்ட சக்திகளாக அருள்பாலிப்பவள் அன்னை. அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு அமைய வேண்டுமானால் அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆயினும் இந்த அட்ட இலட்சுமிகளில் எந்த இலட்சுமியின் அருளை இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ இயலும். ஆனால் தைர்ய இலட்சுமி என்பவளின் அருளை இழக்க நேர்ந்தால் நம் வாழ்வு என்ன ஆகும் என்று சொல்ல வேண்டியதில்லை. தன்னம்பிக்கையைக் கொடுத்து, எத்துனை துன்பம் வந்தாலும் அதைத் தாங்கி நின்று மீண்டு வரும் மாயம் செய்பவள் தைரிய இலக்குமி! தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு என பல்வேறு அழகான நாமங்கள் சூடியவள் அன்னை. நன்னடத்தை, நல்லதொரு குறிக்கோள், சோம்பலின்மை ஆகியவைகளை உடையவர்களுக்கும், தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும் தன்னுடைய பூரண அருளைப் பொழிபவள் அன்னை. தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றி, கோபூசை செய்து அன்னையை வழிபட உள்ளம் குளிர்வாள். இந்துக்களிடம் ஆலய வழிபாடும், இலட்சுமி கடாட்சமும் செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையின் ஓரத்தில் கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் பழமையான இலட்சுமி தேவியின் சிலை ஒன்று கிடைத்துள்ளதாம். இதிலிருந்தே இலட்சுமி தேவியின் தொன்மை நன்று விளங்குகிறது.

    பெரியோரை மதிப்போருக்கும், எப்போதும் உண்மையே பேசுபவர்களுக்கும், தன்னையும், தம் இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், இரக்கமுள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள், போன்றவர்களுக்குத் தம் அருளாசியை அள்ளி வழங்குபவள் அன்னை. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/commons/6/64/Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/Adi_Parashakti&h=841&w=1191&sz=485&tbnid=9dgCQrq9oUjtbM:&tbnh=125&tbnw=177&zoom=1&usg=__wzId2J8Iwb76I6LKY-gamnoSCac=&docid=7Lh10c5LPa9rjM&sa=X&ei=-yNOUq30FonyrQefhICoAQ&ved=0CDEQ9QEwAg

    Share
  • பாலும் இரத்தம்தானே?

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னையில் மட்டும் தினமும் 28 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் ஆவின்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் விற்பனையாகின்றன. டோட்லா, ஹெரிட்டேஜ் , திருமலா, ஜெர்சி, போன்ற தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த முடிவு செய்து, ஆகஸ்ட் 15 , 2013 நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 2 விலை உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலையுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என்று தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையே தொடரும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆவின் பால் விற்பனையில் , அட்டை தாரர்களுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு, அதிகபட்ச விற்பனை விலையை விட, பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. ஆவின் பாலை விட தனியார் பால் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி , “டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையை உயர்த்துகின்றனர். ஆனால் பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தவில்லை. எங்களுடன் தனியார் பால் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று அறிவித்திருந்த சூழ்நிலையில்,

    நேற்று, சேலத்தில் விவசாயிகள் பாலை தெருவில் கொட்டி மண் பானையை உடைத்திருக்கிறார்கள். பாலுக்கு அதிக விலையும், கூடுதல் மானியமும் கேட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலத்தில் நடத்தியிருகிறார்கள். போராடுவது அவர்கள் உரிமை. அதைப்பற்றி கூறவில்லை. ஆனால் போராடும் முறை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. பல நூறு லிட்டர் பாலை தெருவில் கொட்டித்தான் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்பதில்லையே? பால் என்பது மாட்டின் இரத்தம் அல்லவா. தான் பெற்ற குழந்தைக்கு பால் கொடுக்கும் தாயை தெய்வமாகப் போற்றுகிறோம். ஆனால் ஊர் பெற்ற குழந்தைகளுக்குத் தன் பாலைக் கொடுத்து உயிர் வளர்க்கும் உன்னதமான ஒன்றை இப்படித் தெருவில் கொட்டலாமா? இதை அனாதை குழந்தைகளுக்கோ அல்லது ஆதரவற்ற நோயாளிகளுக்கோ இலவசமாகக் கொடுத்திருக்கலாமே.. ஜப்பான் மக்கள் போராடும் முறையை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. சம்பள உயர்வு கேட்டு போராடும்போது, தங்கள் எதிர்ப்பைக்காட்ட பல மணி நேரங்கள் அதிகமாக சம்பளம் வாங்காமல் உழைப்பார்கள். எத்தனை ஆக்கப்பூர்வமான சிந்தனை இது! வாயில்லா அந்த சீவன்களின் இரத்தத்தை எடுத்து இப்படித் தெருவில் வீச நமக்கு யார் உரிமை கொடுத்தது. அந்த சீவன்கள் பேச முடிந்தால் இந்நேரம் கதறி அழுதிருக்கும் அல்லவா.. அவைகள் எதிர்த்து நின்று போரிட ஆரம்பித்தால் நம் கதி என்னாகும்? இந்த போராட்டத்தின் விளைவுகள் எப்படியிருந்தாலும், இதுபோன்று தெருவில் பாலைக் கொட்டி போராடும் முறை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேதனை!

    Share
  • சட்டங்களும், அவசரச் சட்டங்களும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக ஆன பின்பு நம் நாட்டின் அரசியலமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற சில வரையறைக்குட்பட்டு சட்ட அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த சட்ட அமைப்பை ஏற்படுத்தி 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட காரணத்தினால், இன்றைய சூழலுக்கேற்ப சில திருத்தங்கள், அல்லது புதிய சட்டங்கள் அசாதாரண சூழ்நிலையில் ஏற்படுத்தப்படவேண்டிய அவசரச் சட்டங்கள் அவசரமாக ஏற்படுத்தப்படுகின்றன. பின்பு அவை பாராளுமன்ற அங்கீகாரத்தோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டங்களாகின்றன. சென்ற வாரம் மத்திய மந்திரிசபை கூடி அதை அங்கீகாரம் செய்து ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த அவசரச் சட்டம் இல்லையென்றால் பெரும் பிரச்சனை ஏதும் வந்திருக்கப்போவதில்லை. உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கைகள் இருக்க வேண்டியதுதானே நியாயம்? இதற்கு எதற்கு அவசரச் சட்டம்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே? அவர்களைக் காப்பாற்ற எதற்கு அவசரச் சட்டம்? குடியரசுத் தலைவர் திருப்பியனுப்பிய பிறகாவது அந்த அவசர சட்டத்தை நிறுத்தியிருக்கலாம்.

    காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பொறுமையாக வந்து, எனது கட்சியில், எனது அரசாங்கத்திலும் இப்படி நடக்கலாமா என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கேட்கிறார். ‘முட்டாள்தனமான அவசரச் சட்டம்’ என்கிறார். உடனடியாக வெளிநாட்டிலிருந்து, நான் திரும்பியவுடன் இதுபற்றி விவாதிக்கலாம் என்கிறார் பிரதமர். இன்று, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்கள் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ் , 7 அரசியல் தலைவர்கள் மற்றும் 4 உயர் அதிகாரிகள் உட்பட 45 பேரை குற்றவாளிகள் என்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இவர்களுக்குரிய தண்டனை 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். நாளை இவர்களுடைய தண்டனை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். மேலும் 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதிலிருந்து அவரை தப்புவிப்பதற்காகத்தான் இந்த அவசரச் சட்டம் என்று அறியும்போது கேலிக்கூத்தாகிப்போன சட்ட ஜனநாயகத்தை எண்ணி மக்கள் வெட்கப்படுகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இது போன்று எட்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பதுதான் வேதனையின் உச்சம். மக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வையல்லவா இது தோற்றுவிக்கிறது. நம்முடைய உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதியரசர்கள் மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள். அவர்கள் எடுக்கும் மிகச்சரியான முடிவுகளை ஏற்காமல், அவசரச் சட்டங்கள் மூலமாக குற்றவாளிகளை ஏன் தப்புவிக்க வேண்டும். மேலும் இந்த அவசரச் சட்டத்தின் மூலமாக ஏனைய அரசியல் குற்றவாளிகளும், தப்புவிப்பதற்கு ஏதுவாகிவிடுகிறது என்பதுதானே உண்மை நிலை. இப்படிப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு எப்படி ஊழலற்ற நாணயமான ஆட்சியை வழங்க முடியும் என்று மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையே இது ஏற்படுத்தியுள்ளது! எல்லாம் காலக்கொடுமை!

    Share
  • ஆண் – பெண் நட்புறவு கட்டுரையின் கருத்துக்கான எதிர்வினை

    ஜோதிர்லதா கிரிஜா

    அன்பு மிக்க பவளா அவர்களுக்கு.

    வணக்கம்.

    எனது இம்மடலை வல்லமையில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

    ஆண் – பெண் நட்புறவு கட்டுரை 

     

    வல்லமைக் குழுவினரில் செல்வன் எனும் அன்பர் எனது “ஆண்-பெண் நட்புறவு” எனும் கட்டுரைக்குச் செய்திருந்த விமரிசனத்தையும் அதன் கீழே உங்கள் முத்தாய்ப்பையும் கண்டு வருந்தினேன். திரு செல்வன் அவர்களின் எதிரொலி என்னை வியாபுறச் செய்யவில்லை. யாரேனும் இப்படி எழுதுவார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான். நான் பெண்ணியவாதி என்பதால், என்னைத் தாக்கும் வாய்ப்புக்குச் சிலர் காத்திருப்பார்கள் என்பது அனுபவ வாயிலாக நான் அறிந்ததே! தாக்கட்.டும். அது அவர் உரிமை. ஆனால், சம்பந்தாசம்பந்தமில்லாமல் கருத்துச் சொல்லலாமா? என் கட்டுரைக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தமாம்?

    கட்டுரையோடு தொடர்பற்ற முறையில் இப்படிச் சிலர் எழுதுவார்கள் என்பது எனது அனுபவமாதலால், நம் முன்னோர்கள் ஆண்-பெண் நட்பைக் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்றும், ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை ஏற்கெனவே இருக்கக்கூடிய என்னைப்பற்றிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதையும் அதன் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

    அப்படியும் இப்படி ஒரு விமரிசனம்! “ஆண்வெறுப்புத்தான் பெண்ணியம் எனும் நிலை மாறவேண்டும்” எனும் அர்த்தமற்ற தலைப்பு! பெரும்பாலான ஆண்களின் குரூர ஆதிக்கத்தையும், ஒருதலைப்பட்சமான சட்டங்களையும் எதிர்த்து நான் எழுதிவருவது பல ஆண்களுக்குப் பிடிக்காமல் போவதில் வியப்படைய ஏதுமில்லை!

    ”ஆண் நண்பர்கள் அனைவரும் வன்னுகர்வு செய்பவர்கள் என்பது போல் எழுதி இருப்பது சரியல்ல” என்று இந்த அன்பர் எழுதுகிறார். அப்படி எங்கே சொன்னேன்?! அப்படி ஒரு கருத்தே எனக்குக் கிடையாது. அதனால்தான் நல்ல ஆண்களின் மனம் புண்படும் எனக்கருதி, ‘இதுதான் பொதுவாக ஆண்களின்இலட்சணம்” என்று சொன்னேன். ‘பொதுவாக’ என்றால், அனைவரும் என்று பொருளா? நற்சிந்தனையும் உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான் என்றும் கட்டுரையின் இறுதியில் கூறியும் உள்ளேன். ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்யும் ஆண்களும் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தேனே!

    என்கட்டுரை பெண்ணுரிமை பற்றியதே இல்லையே.

    அடுத்து, பவளா அவர்களே, உங்கள் முத்தாய்ப்புக்கு வருவோம்.

    “உண்மைதான், செல்வன். பெண்ணியம் என்பதற்கு ஆண்வெறுப்பு என்பதல்ல பொருள். தகப்பன், கணவன், சகோதரன், மகன் என்ற உறவுகளுடன்தான் ஒரு பெண் பாதுகாப்பாக, அமைதியாக வாழ முடியும் என்பதே சத்தியம். மொத்த ஆண்களையும் குறை சொல்லுவது நியாயமில்லை என்பதே என் கருத்தும்” என்கிறீர்கள். “ஆணாதிக்க வெறுப்பு” என்பது அநீதியாக ஆதிக்கம் புரியும் ஆண் மீதான வெறுப்பாகத்தானே மாறும்? அவ்வாறு செய்யாத ஆண்களை ஏன் வெறுக்க்ப் போகிறார்களாம்? பெண் மீது தகாத முறையில் ஆதிக்கம் செய்பவர்கள்தானே பெண்ணியம் என்பதற்கே ஆட்சேபிப்பார்கள்?

    அடுத்து, என் கட்டுரையில் எங்கேனும், தகப்பன், கணவன், சகோதரன், மகன் ஆகியோரின் பாதுகாப்பு ஒரு பெண்ணுக்குத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறேனா? நீங்களே சொல்லியுள்ளது போல் இவர்களுடன் வாழ்வதுதான் பாதுகாப்பானது. துளியும் ஐயமில்லை. ஆனால், யாரிடமிருந்து பாதுகாப்பு, பவளா அவர்களே? பிற ஆண்களிடமிருந்துதானே! உங்களையும் மீறி உண்மை வந்துவிட்டது.

    எந்தப் புற்றில் பாம்பு இருக்கும், எதில் எறும்பு. இருக்கும் என்பது தெரியாதாகையால், ஒரு பெண் ஆண் நண்பர்களைத் தொலைவில் வைத்துப் பழகவேண்டும் என்றுதானே சொன்னேன்? இதில் என்ன தப்பைக் கண்டீர்கள்?

    வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது. ஆனால் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர் பொருத்தமற்ற தலைப்பில் கூறப்பட்ட – சம்பந்தமே இல்லாத – கருத்துக்குத் தமுக்கு அடிப்பதும், நான் எழுதவே எழுதாத ஒன்றைக் கற்பித்து அதற்குப் பதில் சொல்லுவதும் முறைதானா? செல்வன் அவர்களின் கருத்தோடு நிறுத்தி யிருந்தால், கணினி முன் இடுப்புக்கடுக்க உட்கார்ந்துகொண்டு இதை எழுதும் தொல்லையை மேற்கொண்டிருந்திருக்கவே மாட்டேன். நீங்களும் அதை அங்கீகரித்து, என் கட்டுரையோடு தொடர்பே அற்ற கருத்தைச் சொன்னதால்தான் இந்தக் கடிதம்.

    இதை வரி விடாமல் வெளியிட்டால் நல்லது. சுருக்குவதாயின் போடவே வேண்டாம்.

    என்றென்றும் நட்புடன்

    ஜோதிர்லதா கிரிஜா

    Share
  • குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

    பவள சங்கரி

    DSC09812-167x300ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.

    இதெல்லாம் இருக்க, இன்றும் இளம் வயதிலேயே துறவறம் வாங்குவதென்பது,, குடும்பத்தையும், உலகியல் இன்பங்களையும் விட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது. வெகு சமீபத்தில் அப்படி ஒருவரைச் சந்தித்தபோது என்னுள் எழுந்த பல கேள்விக்கணைகளுக்கு  பொறுமையாக அவர் பதில் சொன்னவிதம் ஏதோ இருப்பதை உணர்த்தத்தான் செய்தது. மீனாட்சி இன்று குகப்பிரியானந்தாவாகி, விரைவிலேயே , இன்னும் ஓராண்டுகால படிப்பு முடிந்தவுடன்,  பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அச்சாரமாக  சித்த வித்தியானந்தா  என்ற பட்டத்தையும் வெல்லப்போகும் இவருக்கு இந்த எண்ணம் தோன்றியது தன் 13 வயதில் என்கிறார். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் ஆசிரமத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்தபோது, வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டியவர் என்பதில்லாமல், ஒரு தோழமை உணர்வே ஏற்பட்டது. ஒரு சிறு வியாபாரியின் மகளாக, வேலூரில் பிறந்து வளர்ந்த இவருக்கு, துறவறம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் தேடல் ஆரம்பித்திருக்கிறது. வேலூரில் அடிக்கடி வாரியார் சுவாமிகளின் சமயச் சொற்பொழிவு நடைபெறும் காலம் அது. மாலை நேரங்களில் இது போன்று எங்கு சமய சொற்பொழிவுகள் நடந்தாலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவறத்தில் ஈடுபடும் எண்ணம் தோன்றியிருக்கிறது. துறவறத்திற்கான மிகவும் இள வயது என்பதால் ஒரு வருடம் குழந்தைகள் பள்ளியில் சேவை செய்துகொண்டு பயிற்சி எடுத்தபின்பு மடத்தில் சேரலாம் என்றிருக்கிறார்கள். ஒரு வருடம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு சில அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சாரதா கல்லூரி மடத்தில் சென்று தன்னை இணைத்துக்கொண்டு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிப்பதற்குள் பிரம்மச்சரியத்திற்கான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் முடித்து, பகவத்கீதை, வேதாந்தம் என ஓரளவிற்கு தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சேர்ந்த புதிதில் ஒரே வண்ண மஞ்சள் நிற சேலை மட்டுமே உடுத்த வேண்டும். அதன் பிறகு 10 ஆண்டுகள்  சைதன்யா என்கிற வெள்ளை சேலையில் சிகப்பு கரை  வைத்த  சேலை உடுத்த வேண்டியிருந்தது.  பின் 2000ம் ஆண்டில்  தன்னுடைய 35 வது வயதில் பிரம்மச்சரிய தீட்சை எடுத்த பின்பு காவி உடை வழங்கப்பெற்றிருக்கிறார். புருச சுத்தம் நாராயண சுத்தம், பிரம்ம சுத்தம்,  தேவாரம் திருவாசகம், இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற அனைத்திலும் தேர்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் அம்மையார்.

    அன்றாடம், விடியற்காலை 4. 30 மணி முதல்  5.30 வரை பிரார்த்தனை செய்து, 5.30 முதல் 6.30 வரை பூ பறித்தல், பின் 7.30 மணி வரை உடற்பயிற்சி யோகா என அனைத்தும் முடித்து, 7.30 மணி முதல் 8 மணி வரை  சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரைகளுடன் மந்திர உச்சாடணைகளை  முடித்து காலை 8 மணிக்கு காலை உணவு, அதன் பின் 9 மணிக்குள் அவரவர் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும். 12.30 முதல் 2 வரை ஓய்வு பிறகு மீண்டும் மதியப் பணிக்குத் திரும்ப வேண்டும். மாலை 5 முதல் 6.30 வரை பிரார்த்தனை 7 மணி முதல் 7.30 வரை  மடத்திற்குள் இருக்கும் பணிகள்,. 8 மணி  வரை தியானம். அதற்குப் பிறகு இரவு உணவு, பின் ராமகிருஷ்ணர் உபதேசம், ஏனைய மகான்கள் வாழ்க்கை முறைமைகள் பற்றிய உபதேசம். 9.30 வரை நடக்கும் . பிறகு 10 மணிக்கு உறக்கம். அடுத்த நாள் இதே வழமையாக நின்று, நிதானிக்க, யோசிக்க நேரமில்லாத இடைவிடாத இறைப்பணி.  கைக்குத்தல் அரிசி, மசலா பொருட்கள் தவிர்த்த கட்டுப்பாடான உணவு. குறிப்பிட்ட காலங்களுக்கொரு முறை   பணியிடம் மாற்றம்.  இதுவரை 11 பணியிடங்கள் மாறியிருக்கிறார்.

    தற்போது ஆணைக்கட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்தில்  இருக்கிறார்.  இங்கு முழுவதும் தத்துவார்த்த வகுப்புகளுக்குத்தான் முதலிடம் என்கிறார்.  தன்னுடைய மதம் சார்ந்த கொள்கையை அறிந்து கொள்ள வேண்டியே ஒருவர்  வேதம் படிக்க வேண்டியது  அவசியமாகிறது.  சங்கர பாஷ்யம் என்ற மூல நூலிலிருந்து கீதை விரிவுரைகள், பதவுரைகள்  தயானந்த சுவாமிஜி பாரம்பரியத்தோட சொல்லிக்கொடுப்பதற்கு. ஈடு இணை இல்லை என்கிறார். வெளிநாட்டவர் 50 க்கும் மேற்பட்டவர் வந்து நமது வேதமும், கலாச்சாரமும் கற்று கொள்கின்றனர் என்பவர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து வேதம், சமஸ்கிருதம் மற்றும் நம் கலாச்சாரம்  பற்றி படிக்க வருபவர்களுக்குத் தேவையான உதவியை அவர்களுடைய அரசாங்கம் வழங்குகிறதாம். ஆனால் நம் நாட்டில் அது போன்ற உதவியோ, அல்லது கிருத்துவ மதம் மற்றும் இசுலாமிய மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு உதவுவது போல நம் இந்து மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. இந்திய பொருளாதாரமே அதற்கு எந்த விதத்திலும் சாதகமாக  இல்லை என்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்தும்  சந்நியாசம் வாங்குகிறார்களாம். அதற்கு அவர்கள்   முதலில் சட்டப்படி விவாகரத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும் என்ற ஆச்சரியமான தகவலும் கொடுக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற்ற பின்பே சந்நியாசம் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

    இத்துனை சிரமப்பட்டு பெறும் சந்நியாசத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்பதே நமது சந்தேகம். இதை அவரிடமே நான் கேட்டபோது, அவருடைய தெளிவான பதில், “வேதாந்தம் என்பது  அடுத்தவருக்கு சொல்லித்தருவதற்காக  படிப்பது அல்ல. பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் வந்து கேட்போருக்குச் சொல்லிக் கொடுத்தால் போதும்.. உன்னதமான  வேத பாடத்தை அப்படி எளிதாகப் பெற  முடியாது. அதற்கான தகுதியுடையவர்கள் மட்டுமே அதனை உணர்ந்து கற்க முடியும் ” என்பதே எங்கள் குருவின் வாக்கு என்கிறார்.

    ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்றால் இப்படி இத்துனை வேதப்பாடம் அனைத்தும் கற்பதோடு நின்று அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகிறதே, என்று கேட்டபோது,

    பிரேமானந்தா,  நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி போன்ற விஷப்பூடுகளின் வளர்ச்சி உண்மையில் நல்லனவற்றை பகுத்தாய்ந்தறியும்  சக்தியை பாழாக்குகிறது. அதனால் மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால் எங்களாலும் எளிதாகச் சென்று மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போகிறது. குறிப்பாக வட நாடு மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, என்கிறார். தங்கள் குருவின் வாக்குப்படி,  ‘காடு முழுவதும் முட்கள் நிறைந்திருக்கும் போது அதனைச்  சுத்தம் செய்ய ஒருவருக்கு ஒரு பிறவி போதாது. அதனால் செருப்பு போட்டுக்கொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். அறியாமை மட்டுமே இன்றைய  இத்தகைய நிலைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.  அந்த அறியாமை முதலில் விலக வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும். நம்மைச் சுற்றி தெய்வீக அலை பரவ வேண்டும். சந்நியாசிகளைச் சுற்றி இருக்கும் அந்த தெய்வீக அலை பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்று இவர் சொல்வதை முழுமையாக ஏற்க மனம் ஆதாரத்தைத் தேடுகிறது! கர்ம யோகமோ, பக்தி யோகமோ அல்லது ஞான மார்க்கமோ, எதுவாயினும் அவரவர் தர்மப்படி வாழ  வேண்டும் என்பதே கீதை. காட்டும் பாதை. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை  முறைப்படி வாழ வேண்டும்.

    இறுதியாக  சித்து வேலை என்று அம்மையார் வர்ணித்த விசயங்கள் பற்றி மீண்டும் கேட்டபோது, லிங்கம், திருநீறு போன்றவைகள் வரவழைக்கும் வித்தகம்  பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் தென்படலாம்.  ஆனால் அது தெய்வ சக்தியின் உச்ச நிலையை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கக்கூடியது. அதாவது, முள்ளுச் செடியைச் சாப்பிடும் ஓட்டகம்  தன் இரத்தத்தின் சுவைதான் அது என்ற உணர்வே இல்லாமல் அதை இரசித்து  ருசித்து, மேலும், மேலும் உண்ணுகிறது. அது போலத்தான் இந்த சித்து விளையாட்டும், தன் சக்தியை தானே சுவைத்து மேற்கொண்டு உன்னத நிலைக்குச் செல்வதற்கு தடையேற்பட தானே காரணமாகிவிடுகிறார்கள். ஆனால் பொது நலம் கருதி, தன் சுயநலம் தவிர்த்து, சித்து மூலம் மானுட சேவையில் சிறந்து விளங்குவதும் ஒரு வகையில் பாராட்டுக்குரியதோ என்று கேட்டபொழுது, இப்படி எண்ணுவது முழுமையான அறியாமை என்கிறார். இந்த அறியாமை இருளைத்தான் போக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம் என்கிறார். சந்நியாசம் பெறுபவர்கள் இந்த ஆன்ம பலத்தைத்தான் முதலில் பெற வேண்டியுள்ளது. மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. போலிகள் ஏற்படுத்துகிற தீய அலைகளின் தாக்கம் முற்றிலும் மறைய வேண்டும் என்கிறார்.

    “நம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது  ஆன்மீகம் . இதனாலேயே  தான் நம் இந்தியா சீரும், சிறப்புமாக வாழுகிறது. அந்த சக்தி என்றென்றும் நம் நாட்டை வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை. இதனை வெளிநாட்டவர் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு நம் நாட்டவர் உணரவில்லை என்பதுதான் வேதனை. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் வாழத் தகுதியில்லாவிட்டாலும், திரும்பத் திரும்ப சிரமப்பட்டு விசாவை புதுப்பித்துக்கொண்டு, தங்கியிருந்து நம் வேதங்களையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பணிவுடன் கற்றுக் கொள்வதோடு தங்கள் நாட்டிலும் சென்று நம் கலாச்சாரத்தின் பெருமையை பரவச் செய்கிறார்கள் என்பதே நாங்கள் காணும் உண்மை நிலை. ஆனால், 5000 – 10,000 ஆண்டுகள் பழமையான  நம் பாரம்பரியத் தத்துவங்களை முழுமையாகப் படித்துணர்ந்து, அதனை ஆத்மார்த்தமாக, தவறின்றி  சொல்ல சரியான ஆளில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதுதான் அறியாமை எனும் கழிவுகள் நிறைந்த பாத்திரமாக மாறி இருக்கிறது. தப்பைச் சொல்லி புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. காலிப் பாத்திரமாக இருக்கும்போது நல்லவைகளை நிரப்ப எளிதாக இருக்கும். ஆனால் இன்று அல்லவைகளை வெளியேற்றவே பல காலம் வேண்டும் போல் உள்ளது. பகவானின் அருளால் அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    ஆரம்பத்தில் தோழமை உணர்வு மட்டுமே உந்தித்தள்ள அதன் போக்கிலேயே அமைந்த காரசாரமான விவாதங்கள், இறுதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது. ஒரு வேளை இதைத்தான் தெய்வீக அலை என்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது. நல்ல சுத்தமான எண்ணங்கள்தானே தெய்வீக அலை என்பது? என் பாத்திரத்தை காலியாக்கிக்கொண்டு, காலில் விழுந்து ஆசி பெற்று திரும்பினேன்.

    —————-

    நன்றி : திண்ணை

    Share
  • தாது மணலும் சுத்தீகரிக்கப்பட்ட நீரும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளில் சுத்தீகரிக்கப்பட்ட நீர் தமிழக விரைவுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. தாது மணல், இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிமையானது என்பதில் மாநில, மத்திய அரசுகளும் உறுதியாக இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய தாது மணல்களை பல லட்சம் டன் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு இப்பொழுதாவது விழித்துள்ளோம். இரும்பு தாதுப் பொருட்களும், நிலக்கரிச் சுரங்களும் கொள்ளையடிப்பதைப் பார்த்து மனம் வெதும்பி போராடக்கூடிய சூழலில் இருக்கிறோம். இது போலவே இந்த சுத்தீகரிக்கப்பட்ட நீரும், இயற்கை வளங்கள்தான். இவைகளுக்கு உரிமையுடையவர்கள் மக்களும், மத்திய மாநில அரசுகளும்தானே. முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது லிட்டர் 10 ரூபாய், 2 லிட்டர் 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இப்போது ஒரு லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட நீர் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் விலையை நிர்ணயிப்பவர்கள் யார். இதனையும் அரசாங்கம் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் 25 முதல் 30ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படியென்றால் சுத்தீகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தன்ணீர் அவர்களுடைய லாபத்துடன் சேர்த்து ஒரு ரூபாய்தான் ஆகிறது. அப்படியிருக்க எதற்கு இவ்வளவு விலை. செலவினங்களைச் சேர்த்துக் கொண்டாலும் அதிக பட்சமாக லிட்டர் 5 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்னும்போது எதற்கு மக்களை கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். நிலத்தினடியிலிருந்து கிடைக்கும் அனைத்தும் அரசிற்கும், பொது மக்களுக்கும் சொந்தமானது. சுத்தீகரிப்பிற்கான செலவும், அதற்குண்டான லாபமும் வழங்க வேண்டியது மட்டுமே நியாயமல்லவா.. ஒன்றுக்கு 1000 சதவிகிதம் லாபம் வாழ்வாதாரமான குடி நீருக்கு விதிப்பது அநியாயம் அல்லவா.. மாதத்திற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது போல ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 100 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தாது மணல் கொள்ளையை தடுத்தது போல அரசு இதிலும் கவனம் செலுத்துமா? தாது மணலிலிருந்து என்னென்ன பொருட்கள் தயார் செய்ய முடியும் என்பதற்கான ஆய்வரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வெளிநாடுகளில் அவர்கள் இதனை மூலப் பொருளாகக்கொண்டு என்னென்ன பொருட்கள் தயார் செய்கிறார்களோ அதை நாமும் நம் நாட்டில் தயார் செய்யும்பட்சத்தில் வேலைவாய்ப்பும், நாட்டின் வளமும் பெருகும் இல்லையா?

    Share