அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அந்நாட்டில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நண்பர் பாஸ்டன் பாலா, தமது அமெரிக்க அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கனவு தேசம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணல் வழியே நீங்கள் காணலாம்.
நித்திலா புதிது புதிதாக நிறையக் கற்றும் செய்து பார்த்தும் வருகிறார். அவற்றுள் ஓவியங்கள், கலைப்பொருள்கள், பாடல்கள், விளையாட்டுகள் எனப் பலவும் உண்டு. இந்தப் பதிவில் நித்திலா, தமது கலைப்பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது, நமது அலைவரிசையின் 1000ஆவது பதிவு.
ஓவியர் ஸ்யாம், குறும்புகள், சேட்டைகள், லூட்டிகள் நிறைந்த தன் கால்சட்டைக் கால நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.
தமது ஓவியங்கள், அவற்றின் பின்னணி ஆகியவற்றை விளக்கும் ஓவியர் ஸ்யாம், தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களையும் அவற்றின் இப்போதைய நிலையையும் விவரிக்கிறார். ஓவியர்களைக் கூலித் தொழிலாளிகள் போன்று நடத்துவதைக் கண்டிப்பதுடன், ஓவியர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஓவியத்தின் மதிப்பு, கலையை வெளிப்படுத்த வேண்டிய இடம், கலைஞர்களிடம் இருக்க வேண்டிய நெகிழ்வுத்தன்மை போன்ற பலவற்றையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த வெளிப்படையான உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.
ஓவியர் ஸ்யாம் உடனான உரையாடல் தொடர்கிறது. செல்பேசி என்ற கருவி, தகவல் தொடர்பில் மட்டுமின்றி, காதலிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. காதலர் மனங்களிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அவை என்னென்ன என்று விளக்குவதோடு லிவிங் டுகெதர், ஒழுக்க நிலைப்பாடுகள், பெண்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் எனப் பலவற்றையும் விவரிக்கிறார். குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) எனக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துரைக்கிறார். இக்காலக் காதலைக் கண்ணாடி போல் காட்டும் இந்த உரையாடலைக் கேளுங்கள்.
கண்ணைக் கட்டிவிட்டால் உங்களால் ஓவியம் வரைய முடியுமா? என ஓவியர் ஸ்யாமுக்கு ஒரு சவால் விடுத்தோம். அதை உடனே ஏற்றுக்கொண்டு, என்ன வரைய வேண்டும் என்று கேட்டார். ஒரு காதல் காட்சியை வரையக் கேட்டோம். அவர் என்ன வரைந்திருக்கிறார் என்று பாருங்கள். அத்துடன், இந்தக் காதலர் தினத்தில் அவரது காதல் அனுபவங்களையும் காதல் பற்றிய, காதலர்கள் பற்றிய அவரது அதிரடியான கருத்துகளையும் நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பாருங்கள், கேளுங்கள்.
தைப்பூசத்து அன்று அறிவித்த முருகப் பெருமான் பாட்டுப் போட்டிக்கான முடிவுகளை முனைவர் வ.வே.சு. அறிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள். முனைவர் வ.வே.சு. அவர்களுக்கும் ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் நன்றிகள்.
திருமணத்துக்கு முன்பு ஜாதகம் பார்த்துத் தீர்மானிப்பது போல், காதலிக்கும் முன்பும் ஜாதகம் பார்த்துத் தீர்மானிக்கலாமா? எந்தெந்தப் பொருத்தங்களை முக்கியமாகப் பார்க்க வேண்டும்? திருமணம் தள்ளிப் போவதற்கு என்ன காரணம்? ஜாதகம் பார்த்தும் பார்க்காமலும் செய்த திருமணங்கள் எப்படி இருக்கின்றன? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஜோதிடர் வேதா கோபாலன் பதில் அளிக்கிறார்.
நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், வாணி, நாவி பிழைதிருத்திகள் உள்பட, பல்வேறு மென்பொருள்களைத் தமிழில் உருவாக்கியவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தமிழக முதலமைச்சரின் கணித்தமிழ் விருது ஆகியவற்றைப் பெற்றவர். தமது மென்பொருள்கள், தேடல்கள், ஆய்வு முயற்சிகள் அனைத்தையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், தனது கணித்தமிழ் ஆய்வுகளை, புதிய முயற்சிகளை, தேடல்களை தொடர்ந்து விவரிக்கிறார். பொது வெளியில் வைக்கப்படாத அவரது தனிப்பட்ட மென்பொருள்கள், நிரல் பணிகள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நமக்குச் செயல்படுத்திக் காட்டுகிறார். தமிழில் எத்தனை இணையத்தளங்கள் உள்ளன? எத்தனை வலைப்பதிவுகள் உள்ளன? இதோ தரவுகள். உரிய ஆதரவு அமைந்தால், தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த நேர்காணலின் வழியே நாம் தெரிந்துகொள்ளலாம்.
“நான் ‘கமர்சியல் ஆர்டிஸ்ட்’ தான். மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே என் குறிக்கோள்” என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் ஓவியர் ஸ்யாம். சமகால ஓவியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ரசிகர்கள், பேஸ்புக் நண்பர்கள் ஆகியோருடனான அனுபவங்களையும் மனம் திறந்து பேசுகிறார். டிஜிட்டல் ஓவியங்கள், பேஸ் ஆப், வரையும் கருவிகள் உள்பட ஓவியத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தன் பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார். எங்கள் வாழ்க்கையை உங்கள் ஓவியங்களில் காண்கிறோம் எனக் கசிந்துருகும் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற ஸ்யாம், இதோ நம் முன்னே.
ஓவியர் ஸ்யாம் இந்த அமர்வில், தனக்குப் பிடித்த பெண்கள், ஈர்த்த நடிகைகள், கவர்ந்த பேரழகிகள் ஆகியோரைப் பற்றி விவரிக்கிறார். தனது ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் யார் யார்? வரையத் தூண்டும் முகங்கள் எவை? பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்கள், இராஜபாளையத்துத் தேவதைகள், அவர்களின் உடல்வாகு, நிர்வாண மேனிகளின் மீது சாக்லெட்டால் தான் வரைந்த ‘பாடி பெயின்டிங்’ உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
ஓவியர் ஸ்யாம், யாரிடமும் சொல்லாமல் 15 வயதில், கால்சட்டை அணிந்த சிறுவனாக, ஊரிலிருந்து சென்னைக்கு ஓடிவந்தார். ஏன் வந்தார்? சென்னையில் யாரையெல்லாம் சந்தித்தார்? எங்கே தங்கினார்? இதே போன்று பல முறைகள் அவர், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார். அப்போது என்ன நடந்தது? 12 வயதில் காஷ்மீருக்குச் சென்றது ஏன்? அங்கே அவருக்கு ஏற்பட்ட திடீர்த் திருப்பங்கள் என்னென்ன? இந்த அனுபவங்களை எல்லாம் இந்த அமர்வில் ஸ்யாம் மிகச் சுவையாக விவரிக்கிறார்.
ஸ்யாம், ஓவிய உலகின் சச்சின் டெண்டுல்கர். மிக அழகான, இயல்பான, நேர்த்தியான ஓவியங்களை மிக வேகமாக வரையக்கூடியவர். ஒரே நாளில் 50 – 100 என வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர். இதுவரை இலட்சக்கணக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர். தமிழ்ப் பத்திரிகை உலகில், பதிப்புலகில் அழுத்தமான முத்திரை பதித்தவர். ஆயினும் வெற்றி என்ற சொல்லையே பொருட்படுத்தாமல் பயணிப்பவர்.
15 வயதில் இராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்தவர். வந்த மூன்றாவது நாளே குமுதத்திற்குப் படம் போட்டவர். வந்த மூன்றாவது மாதமே சென்னையில் வீடு வாங்கியவர். இவையெல்லாம் திட்டமிடாமல், தற்செயலாக நடந்தவை. இப்போது நினைத்தாலும் உத்வேகம் கொள்ள வைக்கும் அந்தச் சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடனான உற்சாக உரையாடலைப் பாருங்கள்.