15 வயதில் வீடு வாங்கினேன் – ஓவியர் ஸ்யாம் – 1

சந்திப்பு: அண்ணாகண்ணன்

ஸ்யாம், ஓவிய உலகின் சச்சின் டெண்டுல்கர். மிக அழகான, இயல்பான, நேர்த்தியான ஓவியங்களை மிக வேகமாக வரையக்கூடியவர். ஒரே நாளில் 50 – 100 என வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர். இதுவரை இலட்சக்கணக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர். தமிழ்ப் பத்திரிகை உலகில், பதிப்புலகில் அழுத்தமான முத்திரை பதித்தவர். ஆயினும் வெற்றி என்ற சொல்லையே பொருட்படுத்தாமல் பயணிப்பவர்.

15 வயதில் இராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்தவர். வந்த மூன்றாவது நாளே குமுதத்திற்குப் படம் போட்டவர். வந்த மூன்றாவது மாதமே சென்னையில் வீடு வாங்கியவர். இவையெல்லாம் திட்டமிடாமல், தற்செயலாக நடந்தவை. இப்போது நினைத்தாலும் உத்வேகம் கொள்ள வைக்கும் அந்தச் சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடனான உற்சாக உரையாடலைப் பாருங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *