Tag: கவிஞர் பூராம்

  • வெறுப்பின் வெப்பப்பூவின் உயிர் கேட்கும் தருணம்

    -கவிஞர் பூராம்

    கந்தகத்தின்  நெடி
    மூளையில் ஆணியாக
    அறையப்பட்டுவிட்டது!

    எத்திசையில் இருந்து
    தோட்டாக்கள் இதயம்
    பிளக்குமென்ற பயத்தின் உச்சத்தில்
    புத்தகத்தின் பக்கங்கள்
    வெறுமையில் திருப்பப்படுகின்றன!

    யாருமற்ற பேருந்து நி்ன்று
    சென்றாலும்
    நிற்பதற்கே இடமில்லா பேருந்து
    கடந்து சென்றாலும்
    நடுங்கி தளர்கிறது பெண்ணுடல்!

    பேரன்பின் வசந்த காலம்
    என்று வருமோவென
    இருந்து கிடக்கிறது
    ஆன்மாவின் ஒரு துளி.

    Share
  • சூரியனை உட்கொள்ளும் பொழுது

    -கவிஞர் பூராம்

    அமுதஒளி தீண்டலில் பனியாய் நனைந்து
    உயிாின் உள்ளறையில் குளிா்ந்து
    ஆன்மகானம் கேட்டுக்கொண்டே இருக்கிறது

    வெம்மையின் தழும்பளில் சருகாய் எரிந்து
    பாறைப்பெண்ணின் பனிக்குட உடைப்பில்
    ஊற்றாய் பெருகும் நூற்றாண்டுத்தவம்

    உடலூற்றில் பொங்கி எழும்
    அன்பெனும் ஆன்ம வெள்ளத்தில்
    கடைகோடி விளிம்பில் அவளின் புன்னகை

    வியர்வையின் வற்றாத நதியில் உழைப்பின்
    உன்னதங்கள் நீர்க்குமிழியாய் சிலகணங்கள்
    கடந்துசெல்ல எத்தனையோ இருந்தாலும்
    இருந்து நினைக்க அவளின் முதல்பாா்வை!
    உதிர்ந்து விழும் ஒவ்வொரு இலையும்
    தெரியவில்லை வருந்துவதாக!
    வெறித்தப் பாா்வையோடு வெட்டவெளியில்
    சருகாக மறுக்கும் தருணங்கள்

    இலையவளின் ஆரவார மகிழ்ச்சியில்
    பறவைகளின் இளைப்பாறலில்
    இந்தக் கோடையும் கடந்துசெல்லும் வெறுமையில்.

    Share
  • சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

    -கவிஞர் பூராம்

    உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
    காற்றின் இருத்தலைப் போலக் காமம்
    வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
    இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
    ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைதேடி
    கனவுகளோடு நானும்

    தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
    பண்பாட்டுப் பாறையின் சுமையில்
    நிறம் மாறிய ஓவியமாக மனம்!

    துணையின் தேவையில் கண்டடைந்த
    வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
    முதல் காமமுத்தத்திற்காக!

    அவனோடு வாழ்ந்துவிட
    துணிந்துவிட்ட துணிச்சலில் சிறு உடைப்பு
    உதடுகளின் உரசலில் நாசியில்
    மோதிச் சென்ற வாசனை
    தன்னிலை இழந்த வயிறும் மனமும்

    காமத்தின் தேவையில்
    சேர்த்துவைத்த பொக்கிஷங்கள்
    கேட்பாறற்றுக் குப்பைத்தொட்டியில்
    முகச்சிரிப்பில் உடல் பூரிப்பில்
    கடந்துசெல்லும் ஒவ்வொரு இரவிலும்
    நகும் காலம்!

     

    Share
  • வரைந்த ஓவியத்தில் ஒளிந்துகொண்ட கோடுகள்

    -கவிஞர் பூராம்

    கடந்து சென்ற பாா்வையில்
    காற்றோடு உறவாடி காலம்காணா
    வானோடு நிலைத்திருந்து
    கண்களைக் கேட்டேன்
    காட்டு அவனது இதயத்தை என்று!

    காணும் பொருளெல்லாம் காணாமல்போக
    காணாத பொருளைக் கண்டேன்
    அவனெனும் இதயத்துள் – மாயை
    மனதுக்குத் தெரியவில்லை காற்றாய்
    கண்ணாமூச்சி ஆடுகிறது என்னோடு!

    அவனுக்கும் தெரிந்துதான் இருக்கும்
    என் தேவை, ஏற்க மறுக்கும் பாா்வையோடு
    நகர்ந்து செல்லும் பயத்தோடு அவன்!

    மரணத்தின் வாசனை சில நுகர்தல்
    அவனோடு அலைவதைக்கண்டு
    சொல்லாமல் கடந்து சென்ற அன்பு
    பாறையின் ஓவியமாக
    ஒவ்வொரு சந்திப்பிலும் அழகோடு அபிநயத்தது!

    பத்தாண்டு கோடை கழிந்து
    முதல் மழையில் பேருந்து நிறுத்தத்தில்
    எதிரெதிர் திசையில் ….

    அதே பாா்வையோடு அவன் சொன்ன
    முதல் வாா்த்தை முட்டியது உதட்டில்
    வழிந்த கண்ணீர்த்தூளியில் அவன்
    அழ மறுக்கும் கண்களில் நான்
    கொடுரமானது சமூகம்.

    Share
  • சூழல்

    கவிஞர் பூராம்

    தூரலொடு கூடிய பெருமழை
    கூட்ட நெரிச்சலில்
    அவளுக்கருகில் அவன்
    விரும்புவதில்லை இதுபோன்ற
    நெருக்கத்தை
    அவளின் பரிசம் அவனை
    விலக மறுத்தது
    அவளின் தேவையும் நிராகரிக்க மனமில்லாத
    மனதோடு அவனும்
    உடல்கள் உரசலில் இனம்புரியாத இன்பத்துடன்
    பயணத்தின் நடுவே
    சூழல் கண்காணிப்பின்
    அருவருப்பும் அவளின் புரிதலும்
    இன்பமெல்லாம் அடி வனத்திற்கு அப்பால்
    சிறிய அவமானத்துடன்
    அவள் நினைவோடு
    கடந்து செல்லும் காற்று.

    Share
  • கல்வி

    -கவிஞர் பூராம்

    பிஞ்சு விரல்கள்
    வலி தாங்காமல் மனம்

    கண்களில் குளம்
    வலிந்தோடும் கன்னத்தி்ன் நீா்
    சுட்டது என்னை

    கூன்விழுந்த முதுகு
    கவிழ்ந்த தலை
    நம்பிக்கையில்லாக் கண்கள்

    பேச மறுக்கும் வாய்
    ஓலமிடும் மௌனம்
    அவமானத்தில்  நான்

    உண்ண பசியில்லை உண்கிறேன்
    சிந்திக்க மனமில்லை படிக்கிறேன்

    எழுத்துக்களோடு ஓயாத போராட்டம்
    சொற்களோடு முடிவில்லா தொல்லை

    அன்பாய் சில பேச
    பாசமாய் பகிர்ந்துண்ண
    ஏது நேரம்
    படிக்கிறார்கள் பிஞ்சுகள்

    அம்மாவின் ஆசைக்காக
    அப்பாவின் அன்புக்காக

    Share
  • ஹைக்கூக் கவிதைகள்

    கவிஞா் பூராம்
    (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    1.பிழை.

    மழழை பேசும்
    வாா்த்தைகள் அனைத்தும்
    கவிதை

    2. பணமுதலை.

    உழைத்து உழைத்து
    அனாதையானது நடுத்தரவா்க்கம்
    உழைத்து உழைத்து
    வறுமையானது ஏழைவா்க்கம்

    3. குறட்டை.

    நோக்கிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் முகம்
    பேசிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் குரல்
    இரவெல்லாம் கண்விழித்த
    அசதியில் அவன்

    Share