சூழல்

கவிஞர் பூராம்

தூரலொடு கூடிய பெருமழை
கூட்ட நெரிச்சலில்
அவளுக்கருகில் அவன்
விரும்புவதில்லை இதுபோன்ற
நெருக்கத்தை
அவளின் பரிசம் அவனை
விலக மறுத்தது
அவளின் தேவையும் நிராகரிக்க மனமில்லாத
மனதோடு அவனும்
உடல்கள் உரசலில் இனம்புரியாத இன்பத்துடன்
பயணத்தின் நடுவே
சூழல் கண்காணிப்பின்
அருவருப்பும் அவளின் புரிதலும்
இன்பமெல்லாம் அடி வனத்திற்கு அப்பால்
சிறிய அவமானத்துடன்
அவள் நினைவோடு
கடந்து செல்லும் காற்று.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *