வரைந்த ஓவியத்தில் ஒளிந்துகொண்ட கோடுகள்
-கவிஞர் பூராம்
கடந்து சென்ற பாா்வையில்
காற்றோடு உறவாடி காலம்காணா
வானோடு நிலைத்திருந்து
கண்களைக் கேட்டேன்
காட்டு அவனது இதயத்தை என்று!
காணும் பொருளெல்லாம் காணாமல்போக
காணாத பொருளைக் கண்டேன்
அவனெனும் இதயத்துள் – மாயை
மனதுக்குத் தெரியவில்லை காற்றாய்
கண்ணாமூச்சி ஆடுகிறது என்னோடு!
அவனுக்கும் தெரிந்துதான் இருக்கும்
என் தேவை, ஏற்க மறுக்கும் பாா்வையோடு
நகர்ந்து செல்லும் பயத்தோடு அவன்!
மரணத்தின் வாசனை சில நுகர்தல்
அவனோடு அலைவதைக்கண்டு
சொல்லாமல் கடந்து சென்ற அன்பு
பாறையின் ஓவியமாக
ஒவ்வொரு சந்திப்பிலும் அழகோடு அபிநயத்தது!
பத்தாண்டு கோடை கழிந்து
முதல் மழையில் பேருந்து நிறுத்தத்தில்
எதிரெதிர் திசையில் ….
அதே பாா்வையோடு அவன் சொன்ன
முதல் வாா்த்தை முட்டியது உதட்டில்
வழிந்த கண்ணீர்த்தூளியில் அவன்
அழ மறுக்கும் கண்களில் நான்
கொடுரமானது சமூகம்.