அன்புள்ள மணிமொழிக்கு….

நந்திதா

பார் புகழும் பாண்டிய நாட்டின் அரசி மணிமொழி தேவியாரின் பொற்பாதங்களைத் தொழுது,தங்கள் திருவளர் செல்வன் பொன்மாறன் எழுதியதை என் மெய்காப்பாளன் மார்த்தாண்டத்திடம் கொடுத்து தங்களிடம் சேர்ப்பிக்குமாறு கட்டளை இட்டுள்ளேன்.

திருமுகத்தின் மேல் பொறிக்கப்பட்ட”மீன் இலச்சினையையும், என் கணையாழியின் சின்னத்தையும் கண்டு தங்கள் திரு குமாரன் நலமுடன் இருக்கிறான் என்பதை அறிந்து, தங்கள் திருமுகம் ஆதவனைக் கண்ட தாமரை மலர் போல் மடல் விரிவதை என் மனக் கண்ணால் காண முடிகிறது.

தங்களின் உத்தரவு பெற்று நானும் மார்த்தாண்டனும் மாறு வேடத்தில் நள்ளிரவில் நகர் வலம் வர புறப்பட்டோம். நாட்டு மக்களின் நலனையும், பிற நாட்டு ஒற்றர்கள் ஊடுவுறுவதை அறியவும் வேட்கை கொள்வது நல்ல அரசனின் அழகு அன்றோ. அவ்விதம் செல்ல நம் நாட்டு மக்கள் நலமுடனும், மகிழ்வுடனும் இருப்பதை அறிந்தோம் நாங்கள் இருவரும். எல்லாம் அந்த ஆலவாயான் அருளே.

நகரத்தைச் சுற்றிவிட்டு திரும்பும் வேளை அந் நள்ளிரவில் ஓரு கரிய உருவம் பதுங்கி ஓட நாங்கள் ஐயத்துடன் உருவத்தின் பின் செல்ல செல்ல நாங்கள் ஊர் எல்லையைத் தாண்டி விட்டதை சிறிது நேரம் சென்ற பின்னர்தான் உணர்ந்தோம். இந்த உருவம் பல வினாக்களை எழுப்பவே அரண்மனை திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டோம். பாண்டிய வம்சத்தில் வந்த நான் எப்படி என் கடமையிலிருந்து தவறுவது?

முன்னால் சென்ற உருவம், நகர எல்லையைக் கடந்து, வயல்களையும் கடந்து சென்றது. முடிவில் நாங்கள் வெகுதூரம் வந்து விட்டதை உண்ர்ந்தோம். அப் பாதை மிக கடினமாகி சிறு கற்களும், பாறைகளும் எங்கள் காலைப் பதம் பார்த்தன. கரிய உருவம் மேலே ஏறுவது தெரிய இடுப்பில் சொறுகிய வாளைத் தொட்ட வண்ணம் அதே பாதையில் முன்னேறினோம். நாங்கள் செல்லும் பாதை தற்பொழுது மலைப் பாதை என அந்த இருட்டில் உணர்ந்தோம். உருவத்திற்கு இப் பாதை பழக்கம் போலும். அதனால் ஏறி எங்கோ இருட்டில் மறைந்து விட்டது. இனி எங்கே செல்வது என்னும் வேளையில் தோளில் ஏதோ உராயவே, வாளை உருவி வெட்ட, அது ஆலபம் விழுது என உண்ர்ந்தோம். ஏதோ மிருகத்தின் உறுமல் கேட்க, சிந்தனை செய்யாது ஆல விழுதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி பத்திரமாக ஒரு கிளையில் இளைப்பாறினோம். மார்த்தாண்டன் கூறினான், “இளவரசே தாங்கள் கொஞ்சம் இளைப்பாருங்கள். நான் காவல் புரிகிறேன். இந்த இருட்டில் எங்கு செல்வது? என்றான். அவனது யோசனை சரி எனப் படவே நான் இளைப்பாறினேன். நான்கு புறத்திலும் மலைக் கன்னியை கரிய போர்வை மூட அவளோ நன்றாக உற்ங்கிக் கொண்டு இருந்தாள். அவள் உறங்க வண்டுகள் பண் இசைத்துக் கொண்டிருக்க, மின் மினிப் பூச்சிகள் நடன மாடிக் கொண்டிருந்தன. நேரம் மெதுவாக நகர்ந்து இருளின் கரிய போர்வையை ஆதவன் தன் பொன் கிரணங்களால் நீக்க மலைக் கன்னி தன் இமைகளைத் திறந்தாள். ஆதவனின் கிரணங்கள் நெடுந்துயர்ந்த மரத்தின் இலைகளின் ஊடே வந்து மரகதப் பட்டில் வட்ட வட்ட சரிகை வேலை செய்து நெய்த கம்பளம் போல் காட்சி அளித்தது. மலைக் கன்னி தன் அழகைக் பூரணமாக காட்டவில்லை. அவ்வளவு அடர்ந்த காடு.

எனினும், விடியலுக்காகக் காத்திருந்த புள்ளினங்களின் ஓசை மனதிற்கு இனிமையை சேர்த்தது. அங்கு குயில், கிளிகள், மரங்க்கொத்தி,வலியான், ஆனைச் சாத்தான், பல வர்ணத்தில் வண்டுகள், தேனீக்கள், இவைகளின் பாட்டுக்குத் தாளம் போடுவது போல், அருகில் ஓடும் ஓடையின் சல சலப்பு. இவைகளைக் கண்டு மெய் மறந்து விட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது அது குறிஞ்சி நிலம் என.குறிஞ்சியின் மாண்பினை அப்படியே வண்ணக் கலவையில் தீட்டியத்து போல் இருந்தது அக் காட்சி. அதுவும் நம் பாண்டிய நாட்டின் மிக அருகிலேயே உள்ளதை நாம் அறியவில்லை என தெரிந்ததும் வருத்தமாக இருந்தது. நம் பார்வை இங்கு படவே இல்லையா அல்லது இங்குள்ள மக்கள் நம் நாட்டு மக்களுடன் கலக்கவில்லையா?

ஒருவேளை நாம் யவன தேசத்தாருடன் வாணிபம் செய்து, குதிரை இறக்குமதி செய்வதிலும், இங்கிருந்து முத்து, பவளம், பட்டு, சங்கு, பருத்தி,மிளகு இவைகளை ஏற்றுமதி செய்வதிலும், தமிழ் சங்கம் அமைத்து, தமிழ் வளர்ப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தி இருந்தோமா. அல்லது எதிரிகளின் தாக்குதலை எதிர் கொள்ள படையைப் பலப் ப்டுத்துவதில் இருந்து விட்டோமா தெரியவில்லை. இந்தப் ப்ராந்தியம் நம் எல்லைக்கு அருகில் இருக்க இம் மக்களைப் புறக்கணித்து விட்டோமா. அதனால் இங்கு உள்ளவர் நம் ஊருக்குள் வந்து இருந்தாரோ. பல எண்ணங்கள் தோன்றியது. எப்படியும் ஊர் திரும்பாமல், இப் பிரதேசத்தை அறிவது என முடிவெடுத்தேன். அதற்கு கால தாமதம் ஆகி தாங்கள் கவலை கொள்வீர்கள் என எண்ணி மார்த்தாண்டனை திருமுக த்தோடு அனுப்பி உள்ளேன்.

மேலும் மடலைத் தொடர்கிறேன்… நாங்கள் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி பாறைகளைக் கடந்து மேலே சென்றோம்.வழியில் ஓடிய ஓடையில் முகம், உடலைச் சுத்தம் செய்து மேலே செல்ல பல குரல்கள் விசித்திர மொழியில் பேசும் ஓசைக் கேட்டது. வழியில் பல வித தாவரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள், சந்தனம், அகில், மீங்கில், கடம்பு,, கருங்காலி, பலா, திமிசு, வேங்கை, தேக்கு,மருதம், கனமில்லா பலகை செய்ய உதவும் மரங்கள் வானை முட்டும் உயரத்தில் வளர்ந்து இக் காட்டுக்கு அழகு சேர்க்கிறது தாயே. அட்துடன், மரங்களில் தாவிச் செல்லும் கவிகள், கீழே கரடிகள், மான், யானை, காட்டு எருமை, உடும்பு காட்டு ஆடுகள் மேய்து கொண்டிருந்தன.

ஆர்வத்தால் மேலே சென்றோம். அங்கு பல குடிசைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறுமிகள் காணப் பட்டனர். அவ்வேளையில் ஒருவன் எங்களைக் கண்டு, ஈட்டி போல் ஒன்றை ஏந்தி ஓடிவந்தான். நானும் மார்த்தாண்டனும் எங்களிடம் ஆயுதம் ஏதும் இல்லை என இரு கரங்களைத் தூக்கி நின்றோம். அக் கணம், அக் குடிகளின் தலைவன் போலும் வெளியில் வந்து ஈட்டிக் காரனை நிறுத்தினான். பிறகுதான் தெரிந்தது அது ஈட்டி இல்லை, ஈட்டி போன்ற ஆயுதத்தை மூங்கிலில் செய்த்துள்ளனர் என. அத் தலைவனை அங்கு கூடியிருந்த அனைவரும் வணங்கினர். எங்களை அருகில் அழைக்க நாங்களும் சென்று வணங்கி நின்றோம். அன்னையே, அவர்கள் பேசும் மொழி நம்முடைய தமிழ் போன்று இல்லை. நாங்கள் தலைவனை வணங்க நாங்கள் அமர ஒரு இருக்கையைப் போட்டு அமரச் சொல்ல நாங்களும் அமர்ந்தோம். தலைவன் தன் கைகளைத் தட்ட ஒரு பெண் ஒரு மரத்தட்டில், பால், தினை, தேன்,கிழங்கு, உப்பு கொண்டு வைக்க எங்களுக்கு சைகைக் காட்டினான் தலைவன். உப்பு வேண்டுமா அல்லது தேன் வேண்டுமா. முதலில் புரியாமல், யோசித்து செயல் பட்டேன். பாலில் தேன் சேர்ப்பது வழ்க்கம், உப்பு சேர்ப்பதில்லையே.. என பாலில் தேன் சேர்த்தேன். தலைவன் முகத்திலும், மற்றவர் முகத்திலும் புன்னகையைக் கண்டேன். அவனை வணங்கிவிட்டு, பாலை அவனுக்கு கொடுக்க அவனும் பாலை எடுத்துக் கொண்டான். தன் இரு கைகளை கூப்பி ஆகாயத்தையும், மலையைச் சுற்றியும் வணங்கினான். அப் பொழுது உணர்ந்தே. நம்மைப் போல் தெய்வங்களை சிலா வடிவத்தில் ஆராதிப்பதில்லை என. மனித சக்தியை விட இயற்கைக்கு சக்தி அதிகம். எனவே இயற்கையை வணங்குகிறார்கள். அவன் தேனுடன் உப்பு வைத்தது பற்றி யோசிக்க, எனக்கு ஒன்று புரிந்தது. அம் மக்களை நண்பர்களாக எண்ணுவர்கள் பாலும் தேனும் கலந்து சாப்பிட வேண்டும், இல்லை எதிரியாக நினைத்தால் உப்பைக் கலப்பார்கள் என்று.

நம் தமிழர்பண்பாடு எல்லாரையும் அரவணைப்பது, அன்பு செலுத்துவது அன்றோ. நான் கொடுத்த பாலைக் குடித்து விட்டு, என்னை ஆரத் தழுவிக் கொண்டான். அன்று அங்கு என்னை தங்கச் சொல்லவே, நானும் சம்மத்தித்தேன். உங்களுக்கு இச் செய்தியை கொடுக்காவிடில் நீங்கள் துயரம் அடைவீர்கள் என மடலை அனுப்பி உள்ளேன். நான் நாளை காலை வரும் வேளை தாங்கள் பாலும் தேனுமே தந்து இத் தலைவனை வரவேற்பீர்களாக.

இங்கு உள்ள மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். நம்மைப் போல் ஆடைகள் உடுத்துவதில்லை. நல்ல ப்லசாலிகள். இங்குள்ள மூலிகைகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். நாகப் பாம்பின் விஷத்தை முறிக்கும் மூலிகை இங்கு உள்ளது. நாங்கள் பால் அருந்தும் போது ஒரு கீரீயும் பாம்பும் சண்டை போட்டு, பாம்ப் இறந்து விட்டது. கீரீயின் உடலை பல முறை பாம்பு தீண்டி இருக்க அது அருகில் இருந்த ஒரு செடியில் புரண்டு புரண்டு எழுந்து மறு கணம் ஓடி விட்டது. இதைதவிர இவர்களின் வீடுகளில் பல வண்ண ஓவியங்களைக் கண்டு அந்த வர்ணத்திலேதான் இம் மடலை எழுதியுள்ளேன்.

இம் மக்களை நாம் அன்புடன் அரவணைத்து நல் வாழ்வை அமத்துக் கொடுத்தா நம் நாட்டு எல்லையும் விரியும். இவர்களும் எல்லையைக் காப்பாற்றுவார்கள். யுத்தம் புரிந்து பல ஆயிரம் மக்களைப் பலியாக்கி அந்த சவங்களின் மேல் சாம்ராஜ்ஜியம் எழுப்புவதை நான் விரும்பவில்லை அன்பு செலுத்தி, ஏழை எளியவர்களுக்கு, கல்வி, கலாச்சாரம் புகட்டுவோம்..

அகநானூறூ தொகுப்பித்த உக்கிர பெருவழுதி குறிஞ்சி விருதம் பாடுவதில் வல்லவர். அவர் வழி வந்தவன் நான். புறநானூறூம் பெருமையாக கூறும் வரிகள் முன்னூர்த்தே தன் புறம்பு நன்னாடு என்று…. இதை பறை சாற்றும் வழியில் நாம் இக் குறிஞ்சி வாழ் மக்களை நம் பாண்டிய நாட்டுடன் இணைப்போம்

நாளை இம் மலை நாட்டுத் தலைவனுடன் வருகை புரிகிறேன்.

இங்கனம்

தங்கள் பொற்பாதங்களைத் தொழும் பொன் மாறன்

(அனுப்புனர்….நந்திதா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *