தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !

0

ajay

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன் ஆனந்த மனப்பாங்கில்

என்னோடு ஆடிவரும்

எப்போதும் புதிதான

இத்திருவிளை யாடலின் பொருள்

என்ன வென்று சொல் ?

நான் பேச விழைவ தெல்லாம்,

சொல்ல விடுவ தில்லை நீ !

உதட்டி லிருந்து

வார்த்தைகளைப் பிடுங்குவாய்,

உள்ளே என்னுள்

உட்கார்ந்த வண்ணம் !

என் மொழிகளைக் கொண்டு

உன் வாசகத்தை

உரைப்பாய்,

இன்னிசை மூலமாக !

பேச நினைத்த தெல்லாம் நான்

பிறகு மறந்து போகிறேன் !

நான் சொல்ல

நீ விழைவ தெல்லாம்

நான் மட்டும் சொல்கிறேன் !

அலை மோதும் கீதங்களில்

எனக்குக்

கரை தெரி யாமல் போகும்

அறியாத

தொலைவுக் கப்பால் !

************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mumbai : 400023

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *