தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன் ஆனந்த மனப்பாங்கில்
என்னோடு ஆடிவரும்
எப்போதும் புதிதான
இத்திருவிளை யாடலின் பொருள்
என்ன வென்று சொல் ?
நான் பேச விழைவ தெல்லாம்,
சொல்ல விடுவ தில்லை நீ !
உதட்டி லிருந்து
வார்த்தைகளைப் பிடுங்குவாய்,
உள்ளே என்னுள்
உட்கார்ந்த வண்ணம் !
என் மொழிகளைக் கொண்டு
உன் வாசகத்தை
உரைப்பாய்,
இன்னிசை மூலமாக !
பேச நினைத்த தெல்லாம் நான்
பிறகு மறந்து போகிறேன் !
நான் சொல்ல
நீ விழைவ தெல்லாம்
நான் மட்டும் சொல்கிறேன் !
அலை மோதும் கீதங்களில்
எனக்குக்
கரை தெரி யாமல் போகும்
அறியாத
தொலைவுக் கப்பால் !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mumbai : 400023
*********************