எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

 

அன்பைநடு அறிவைநடு

ஆணவத்தை அகற்று

இன்பைநடு ஈகையைநடு

எண்ணமதை திருத்து

உண்மைநடு உழைப்புநடு

ஊழலினை விரட்டு

உன்மனதில் இலட்சியத்தை

ஊன்றிநின்று நடு !

 

இலக்கியத்தை என்னாளும்

இங்கிதமாய் நடு

நிலத்திலுள்ள மாந்தரிடம்

நிம்மதியை நடு

உனக்குதவி செய்வாரை

உள்ளமதில் நடு

உண்மையது யாவருக்கும்

உதவுமென்று நடு !

 

களவுதனைக் கழைந்துவிட்டு

கண்ணியத்தை நடு

காதலுடன் வாழ்வெலாம்

கல்விதனை நடு

கடவுள்பற்றி நினைக்கின்ற

கருத்தினையும் நடு

கண்களிலே என்னாளும்

கருணையையும் நடு !

 

பிறர்தம்மை நோகாவிடா

பெருமனதை நடு

குறைசொல்லா வகையினிலே

குணங்களையும் நடு

நிறைவான வாழ்வுவர

நிம்மதியை நடு

மறைவான எண்ணங்களை

மனத்தைவிட்டே எடு !

 

வள்ளுவத்தைப் படிக்கின்ற

எண்ணமதை நடு

வாழ்வினிலே பெற்றோரை

மனமதிலே நடு

கண்ணியத்தில் உயர்ந்தோரை

கருத்தினிலே நடு

காலமெலாம் நினைக்கும்படி

வாழ்வினையே நடு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *