காதல் கொடி!
பாகம்பிரியாள்
நம் காதல் மலையைப்போல்,
மௌனமாகவே இருக்கிறது
என்றே நீ அங்கலாய்த்தாய்.
அதற்கு அருகில் நீ சென்றதுண்டா?
துள்ளியோடும் மானைப் போல்,
நினைவுகள் அங்கும் இங்கும்
ஓடிக் கொண்டேயிருக்கும்
நீ வரும் வழி பார்த்தே!
நம் கோபம் போல், சில நினைவுகள்
இறுகிக்கிடக்கும் கரும் பாறையாய்.
சில இடங்களிலோ புதிதான நிறத்தில்,
பச்சைப்பாசி படர்ந்திருக்கும் மெலிதாய்!
சொல்லத் தெரியாத சோகம் போல், பெயர்
தெரியாத பறவைகள் புலம்பிக் கொண்டிருக்கும்.
இளங் கொடிகள் கட்டுண்டு கிடந்தாலும்,
அவ்வப்போது புதிய இலைகள் தலை காட்டும்.
அன்பை ஏற்கிறேன் என்று நீ சொன்ன செய்தி
வந்தவுடனே , சந்தோஷம் எங்கும் பற்றிக் கொண்டு,
குல்மொகர் பூக்களைக் கட்டி காதல், தன் கொடியை ஏற்றிவிடும்
காடெங்கும் கண்ணை பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில்!
படத்திற்கு நன்றி
http://blogs.gonomad.com/traveltalesfromindia/2012/05/gulmohar-flowers.html