விசாகை மனோகரன்

 

 

ஏரெடுத்துழைத்துமை வளர்த்தவர்களை
ஏறெடுத்தும் பார்க்காத தலைமுறையே!
ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத்தவர்களே
அந்நிலை உதைப்பவனுக்கே திரும்பாதா!
தந்தை வழி நட என்பது சரியாயின்
உங்கள் பிள்ளைகளும் எட்டி உதைப்பார்களே!

முதியோர் இல்லம் அனாதைகளுக்கே
அனாதை ஆக்கப்பட்டவர்களுக்காக இல்லயே!
முற்றிலும் துறந்த முனிவனுக்கு துணை தேவையில்லை
நமக்காக முழுவதும் துறந்தவருக்கு அது அவசியம்தானே!

முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

தவமாய் தவமிருந்து மெய்வலிக்கப்பெற்று
கண்ணுக்குள் வைத்து வளர்த்து
எங்கள் சந்தோஷத்தில் சந்தோஷித்த
பெற்றோர்களே! உங்கள் இயல்பு
நீங்கள் இதையும் மன்னிப்பீர்கள்
தலை வணங்குகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.