-பா. ராஜசேகர்

தந்தையால்
இவ்வுலகில்
கால் பதித்தேன்!

சிந்தையில்
இரவு பகல்
முகம் பதித்தேன் !

பந்தியில்
அமர்ந்துண்டேன்
அவன் உழைப்பில்!

அஞ்சினேன்
தவறிழைக்க
முகம் கண்டு !

துஞ்சினேன்
அரவணைப்பில்
தினம் உண்டு !

மிஞ்சினேன்
கல்வியிலே
அவன் பங்குண்டு !

வீதியில்
நடக்கையிலே
அவன் மகனாய் !

வெற்றிகள்
குவிக்கையிலே
தினம் பெருமிதமே !

சுதந்திரம்
தினம் உணர்ந்தேன்
அவன் தந்திரத்தில் !

சாத்திரங்கள்
எடுத்து வைப்பான்
என் நன்மைக்காக !

மந்திரம்
தந்தை சொல்லே
உண்மையாக !

பொத்திப் பொத்தி
வளர்த்தானே
நான் பூமிவாழ !

பொக்கிசமே
தந்தை என்பேன்
உலகம் வாழ !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.