பிச்சைத் திருவிழாக்கள்

1
இராதாவிஜயன்
 

 

 

மக்கள் குறை தீர் மன்றங்கள் 

இங்குறங்க, 

சிற்சில இயங்கிட

பற்பல அலுவலர் சாய்ந்துறங்க

குறை எங்குறைக்க

தீர்வெங்கு கண்டிட??

காலந்தோறும் காண்பது

தேர்தல் விழாக்கள்

செப்படி வித்தைகள் 

மக்கள் மயங்கிட……

நம்குறை தீர்க்கா

நல்லதோர் அரசு

பின்னோரு நாளும்

பயனுறா திட்டங்கள்

வகுப்பதோடு ஏறிடும்

பரண்களிலே,

எமக்கென்ன ‘நீர்’ கேட்கும்

தோரணை பிரச்சாரத்திலே

நீர்சொல்லக் கேட்பது

ஓர் வழக்கமானது 

ஆட்சியில் அமர்ந்தபின்னே??

யாமிட்ட பிச்சையினை

துச்சமெனக் 

கண்டனையோ?

முட்டாள் யாசகா

இனியாவது உன்பெயரென 

மட்டும் அறிந்துகொள்!

சொல்லிச் செய்வது

உம் நாடகம்

செய்தபின் சொல்வது 

எம் நாடகம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.