தாய்மை
செண்பக ஜெகதீசன்
கன்றை நினைத்து கொட்டில்பசு
கண்ணீர் விட்டே அழைப்பதுவும்,
குன்றில் யானை ஏறிநின்று
குரலை உயர்த்திப் பிளிறுவதும்,
தின்று விடாமல் தாய்ப்பறவை
திசைக்கும் திரும்பிக் கூவுவதும்,
என்றும் காணும் உண்மைதானே
ஏற்றம் மிக்கது தாய்மைதானே…!
படத்துக்கு நன்றி: http://designbeep.com/2010/05/09/25-emotional-mother-and-baby-animal-photos-from-wildlife/