ஆவுடை நாயகம்

ganeshpicture5சமயம் என்பதற்கும் மதம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. மதம் என்பது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது அதனால் தான் அதை மெய்யியல்/தத்துவயியல் என்போம். சமயம் என்பது தத்துவயியல் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கலாம் ஆனால் சமயம் ஒன்றுதான் அதுவும் அது இந்து மதம் மட்டும்தான். அப்படிப்பட்ட இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் ஆனைமுகன். உலக வரலாற்றில் அறுவை சிகிச்சை முறைக்கு அறிவு வழங்கியது அவன் பிறப்பு. உலகம் மிகப் பெரியது என்று எடுத்துச் சொன்னவன் முருகன் இல்லை அவன் தம்பி. உலகம் உள்ள கையில் என்று இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு (மடிகணினி ,இணையதள மொபைல்) அன்றே வழிகாட்டியவன் விநாயகன். பெற்றவளையும், தந்தையையும் வணங்கு என்று பகுத்து அறிவு வழங்கிய பாலகன். இயற்கையால் உருவான அனைத்தும் அனைவர்க்கும் பொதுவானது என்று கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை கவிழ்த்து கம்யூனிசம் சொன்ன கவிநாயகன் எங்கள் சிவமைந்தன் அல்லவா ? மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்து பலர் முகவரி சொல்லும் மூத்தவன் அவன் அல்லவா ? கூரை தேவை இல்லை கோபுரம் தேவை இல்லை விநாயகர் சிலை இருந்தால் போதும் வீதிக்கு ஒரு விருட்சம் உண்டு. எளிமையாக இருப்பவன் எழுந்து வந்தால் விசுவரூபம் எடுப்பவன். குழந்தையில்லாத பிரச்சனைக்கு குளக்கரையில் குளித்து அரச மரம் சுத்தினால் ஆணுக்கு விந்தணுவும் வீரியமும் பெண்ணுக்கு கர்பப்பை கோளாறும் நேராகும் என்கிறது நாட்டு வைத்தியம். குலம் தழைக்க குளத்தாங்கரை அருகில் இருந்தவன் எங்கள் தேவியின் தெய்வமகன். குழந்தைகளைப் பார்த்து பிள்ளையாரைச் சுத்தி வா என்ற முதுமொழி போய் ஊரை சுத்திவா என்று ஊதாரியை வளர்க்கும் அம்மை அப்பன்களுக்கு இது பொருந்தாது. தலையில் கொட்டி தோப்புக்கரணமும் போடுவது கேலியாகப் பார்த்தவர்களுக்கு இப்போது ஜெர்மன் நாட்டில் இது ஒரு அறிவு பயற்சிக்காக என்று பணம் வாங்கி வகுப்புகள் நடத்தும் போது வலிக்கிறது. எதையுமே இழந்த பிறகு விழிக்கும் விழிகளுக்கு என்ன எழுதி என்ன பயன்? பகுத்து அறிவு என்பது பிறர் மனதை புண்படுத்தக் கூடாது என்பது. ஆனால் வழக்கம் போல விடுமுறை தினக் கொண்டாட்டம் என்று தொலைக்காட்சிப் பெட்டி தொல்லை கொடுத்தாலும் சகிப்புத்தன்மை என்ற சோம்பேறித்தனத்தோடு வீட்டில் கொழுக்கட்டை உண்டு கழியுங்கள்.பிற மதங்களைப் போல வன்முறையை கையாளச் சொல்லவில்லை. ஜனநாயகம் ,கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் அவர்களின் கைகளை நீதியின் துணை கொண்டு கட்டி இருக்கலாம். இல்லை விளம்பரம் கிடையாது என்று பொருளாதார நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். எதுவும் செய்யாமல் எல்லாம் அவன் செயல் என்பது முயற்சி இல்லாமை என்பதைக் காட்டுகிறது. விநாயகர் சதுர்த்தியில் புதிய விழிப்புணர்வு பிறக்கட்டும்.

படத்திற்கு நன்றி :

http://www.google.co.in/imgres?imgurl=http://isexiiindia.files.wordpress.com/2010/10/ganeshpicture5.jpg&imgrefurl=http://isexiiindia.wordpress.com/2010/10/01/lord-vinayagar-tamil-first-god-prayer/&h=361&w=360&sz=12&tbnid=E4PiRvteA-cIfM:&tbnh=87&tbnw=87&zoom=1&usg=__K6csU5olg6__OjsMozPzH5nkorE=&docid=7YUWP3bCrqEi2M&sa=X&ei=2AIqUtv1KoWakAXaq4HIAg&ved=0CDAQ9QEwAQ&dur=119

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.