பவள சங்கரி

பால்ய விவாகத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவை ஏற்படுத்தியவர் மற்றும் இந்துக் கோவில்களில் இருந்த தேவதாசி முறையை அறவே ஒழித்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டியை அறியாதவர் இருக்கமாட்டார்கள். 1931ம் ஆண்டில் உப்பு சத்யாகிரகத்தில் பங்கு பெற்று முதன்முதலில் சிறை சென்றவர் ருக்மணி லஷ்மிபதி. மிகப்பெரும் கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ராதா சுப்பராயன், பலதார மணம் தடைச்சட்டம், திருமண வயதை மாற்றியமைக்கும் சட்டம், நவீன காலத்திற்கேற்ப இந்திய சட்டங்களை மாற்றியமைக்க ஒப்புதல் பெறும் மசோதாக்கள் போன்றவற்றை வெளியிட்டார். கலாஷேத்ரா என்றொரு அமைப்பை நிறுவி, இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்திற்குப் புத்துணர்வு ஏற்படுத்தக்கூடிய சாதனைப்படைத்தவர், ருக்மிணிதேவி அருண்டேல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.