நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே.
பவள சங்கரி
இன்றைய நவீன உலகில் பெண்களுக்கானச் சட்டத்தின் நிலை, குறிப்பாக அவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான சிக்கல்கள் குறித்துப் பார்ப்போமானால், ஒரு பெண் திருமணம் என்ற பந்தத்தில் நுழைவதற்குக் காரணமே அவளுடைய எதிர்கால பாதுகாப்பு என்ற ஒன்றைக் கருதியே. ஆனால் கணவன் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இரண்டாவது மணம் புரிய விரும்பினால், அவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதைவிட கணவனிடமிருந்து ஜீவனாம்சம் மட்டுமே அவள் பெற முடியும். அவளுடைய சீதனமான நகை, சொத்து, பணம் என அனைத்து தனிப்பட்ட உடமைகளைத் தவிர்த்து குழந்தைகள் முதல் மற்ற அசையா சொத்துகள், அசையும் சொத்துகள் என அனைத்தும் கணவனுக்கே உடமையுள்ளது. ஒரு மனைவி, ஒரு குடும்பத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் இக்காலகட்டத்தில் பலதாரமணம் என்பதெல்லாம் மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது. பொதுவாக சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே.