Andal_painting

சத்தியமணி

தேவாரம் படிக்காது திருவாசகம் பிடிக்காது
பூவாரம் தொடுக்காது ஓதுவார்பண் கேட்காது
தாவாரச் சிவன்கோயில் இடிப்போரைத் தடுக்காது
நாவோரம் துவேசத்தால் நற்றமிழ் வருமோசொல்

அருட்பாவைத் திவ்விய பிரபந்தங்கள் பாடாமல்
கருப்பாவைக் கம்பன்தன் ராமகதைக் கேளாமல்
திருப்பாவை ஆண்டாளை வேசியெனச் சொல்லிக்
கொடும்பாவி எரித்தாலே கனித்தமிழ் வருமோசொல்

பக்திக்கு விழையாமல் பண்பாட்டைக் குறைகூறி
புத்திக்கு ஏற்றாமல் வழிபாட்டைக் கறையாக்கி
சித்திக்கு மூடமெனும் பழக்கமென முடக்கித்தன்
யுத்திக்கு வேடமிடின் பைந்தமிழே வருமோசொல்

உருவில் சிவனாக அருவில் சிவனாக
திருவில் சிவனாகக் குருவில் சிவனாக
இருளில் சிவனாக எதிலும் இவனாக
அருளில் சிவனேதான் மறையில் சிவனான்
அவனைப் புரியாது எதுவும் தெரியாது
தவணைத் தவறுக்கு கர்மவினை புரியாது

தமிழ் வளர்த்த ஆன்மீகம் தர்மநெறியோடு
தமிழ் வளர்த்த ஆண்டவர் அறம்பொருளோடு
தமிழ் வளர்த்த இன்பவீடு பேரளித்தான்றோரின்
தமிழ் வளர்த்த சேவையைப் பழித்தால் தமிழ்வருமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.