அஞ்சலி செலுத்த வந்தவன்

0

பாஸ்கர்

போன வாரம் கூட இவனோடு ஒரு முரண்
இனி விவாதம் செய்ய முடியாது .
எல்லோரும் எல்லோரையும் பார்த்தார்கள் .
எப்படி வருகிறது அழுகை , உடலை பார்த்தவுடன்
எல்லோரும் நல்லவர்கள் இங்கே .
செத்த பின் இங்கு எல்லாம் பரஸ்பரம் .
ஒருவர் மாலையை சரி செய்தார் , பள்ளியில் படித்தவராம்
ஒருவர் அந்த சிரிப்பே வாடவில்லை என்றார் , என்ன பாக்கியோ?
யாரோ நின்று ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தார் .
யாருமே இங்கே சிரிக்கக்கூடாது .
பிற எதை செய்தாலும் கேள்வியில்லை .
எனக்கு பீரிட்டெழவில்லை சோகம் .
நான் இறந்து இருப்பின் அவனுக்கும் இருக்காது .
இப்போது மரணங்கள் துக்கத்தை விட கேள்வியை தான் கொடுக்கின்றன

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *