ஜோதிர்லதா கிரிஜா

2013 இல் இதே தலைப்பில் தினமணியில் வந்த என் கட்டுரை வல்லமையின் 27.09.2013 இதழில் சிலரால் விவாதிக்கப்பட்டது. அக்கட்டுரையில் நான் சொல்லவே சொல்லாதவை யெல்லாம் சாடப்பட்டன. அதாவது எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆண்-பெண் நட்புறவாக இருக்க “பெண்ணுரிமை” பற்றிய விவாதங்கள் அரங்கேறின. எனது பதிலில் அதை நான் சுட்டிக் காட்டியாகிவிட்டது. (விருப்பமுள்ளவர்கள் “வல்லமையில் ஜோதிர்லதா கிரிஜா” என்று சொடுக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.) நிற்க.

ஒரு மிக முக்கியமான விஷயம் பற்றிப் பெற்றோர்களுக்குச் சொல்லும் பொருட்டே இக் கட்டுரை. என் கட்டுரையில், “பத்து வயதுச் சிறுவர்கள் கூட நமபத் தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை; எல்லாத்துக்கும் சின்னவன், ஆனா, கல்யணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு” என்பதோடு மேலும் சிலவற்றையும் கூறியிருந்தமைக்கு நண்பர் செல்வன் அவர்கள் மறுப்பு எழுப்பியிருந்தார். ‘பத்து வயதுச் சிறுவனை வன்புணர்ச்சியாளனாகப் பார்க்கச் சொல்லும் கட்டுரையை என்னவென்று ஏற்றுக் கொள்ளுவது’ என்கிறார்.

அடுத்து, புவனா அவர்கள் விஞ்ஞான ரீதியாகச் சில கேள்விகளை எழுப்புகிறார்: ‘எழுத்தாளர், உலகில் உள்ள அத்தனை ஆண்களையும் அறிவாரா? பத்து வயசுப் பையன்கள் உட்படக் காம எண்ணம் உள்ளவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? அவருடைய sample set என்ன? என்ன survey எடுத்தார்?  Etc…..’

நியாயமான கேள்விதான். தாய்மார்கள் தங்களின் 5 – 8 வயதுப் பெண்கள் அக்கம்பக்கத்து 10, 12 … (மேலும் அதைக் கடந்த) சிறுவர்களால்  வன்னுகர்வு செய்யப்பட்டு உடல் உபாதைகளில் ஈடுபட்டது, அந்தப் பிள்ளைகளின் பெற்றோருடன் அதனால் விரோதம் விளைந்தது போன்றவற்றை எனக்கு எழுதியதுண்டு. ஆனால் நான் கேள்விப்பட்டவற்றைக் கூறி எனது கூற்றை மெய்ப்பிக்க முடியாதல்லவா? அதனால் மவுனமாய் இருக்க நேர்ந்தது. ஆனால், அப்போது தோன்றாத எண்ணம் இத்தனை நாள்கள் கழித்துத் தோன்றியதில் வலைத்தளதில் ஒரு தகவலைக் கண்டேன். நான் ஆய்வு ஏதும் செய்யாவிட்டாலும், ஒரு வெளிநாட்டுத் தாய், மற்றும் சிலர் செய்த ஆய்வறிக்கையின் சில வாக்கியங்களைக் கீழே தருகிறேன்:

Low-income kids report first sexual intercourse at 12 years old in new ISU study

Boys having sex earlier, more often than girls

In the study, boys reported their first sexual intercourse at younger ages (averaging 12.48) than girls (13.16). Boys also had nearly 10 percent higher frequency of Posted Aug 12, 2009

AMES, Iowa — As a new mother herself, Brenda Lohman admits to being shocked by the results of a new study she co-authored. It found that among nearly 1,000 low-income families in three major cities, one in four children between the ages of 11 and 16 reported having sex, with their first sexual intercourse experience occurring at the average age of 12.77.

“So if 12 years was the average age here, that meant that some kids were starting at 10 or younger,” said Lohman, an Iowa State University associate professor of human development and family studies (HDFS). “A handful of kids reported having sex as early as 8 or 9. We know from our follow-up interviews that one boy who reported having sexual intercourse for the first time at age nine had fathered four children by the time he was 18.”

“Those people who say that kids don’t have sex at that young of age should think again,” she said. “Definitely the age is the most shocking thing about this study.”

Tina Jordahl, a former Iowa State HDFS and public policy graduate student who is now a market research specialist with Hospice of Central Iowa, collaborated with Lohman on the study. It analyzes data from the “Welfare, Children and Families: A Three-City Study” — a six-year longitudinal investigation of low-income families living in Boston, Chicago and San Antonio. Their paper, titled “A biological analysis of risk and protective factors associated with early sexual intercourse of young adolescents,” was posted online in the Children and Youth Services Review and will be published in an upcoming issue of the journal.

மற்றோர் ஆய்வறிக்கையில் ஆய்வாளர்கள் அந்தப் பத்து வயதுச் சிறுவர்களில் பெரும்பாலோர் அது தவறு என்று தெரிந்தே ரகசியமாய்ச் செய்வதாய்க் குறிப்பிடுகிறார்.

எனவே, எனது எச்சரிக்கைக் கூற்றில் எந்தத் தவறும் இல்லைதானே?

‘வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது’ என்ற என் சொற்களுக்கு, “ஓஹோ! அப்படியா? என்ன அஹங்காரம்!” என்று இவர் தெரிவித்த கருத்தில் தப்பே இல்லை. அப்படித்தான் சொல்லத் தோன்றும். “விமர்சகர்கள்” என்பதற்குப் பதிலாய் “வாசகர்கள்’ என்று நான் கை தவறி அப்படி எழுதிவிட்டேன் என்பதே உண்மை. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பு, வெறுப்பைப் பொறுத்தது. “விமர்சகர்கள்” என்று சொன்னால் மட்டும் “அஹங்காரம்” இல்லை என்றாகிவிடுமா எனும் கேள்வியும் எழத்தான் செய்யும். என் கட்டுரையில் நான் சொல்லாதவற்றை யெல்லாம் விமர்சிப்பவர்களைப் பற்றி ‘அய்யோ! இப்படி விமர்சித்து விட்டார்களே!’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா? அதுதான் நான் நினைத்தது. “அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது” என்று சொன்னதும் அதனால்தான். இந்த என் எதிர்வினை “அஹங்காரம்” எனில், நான் சொல்லாதவற்றை யெல்லாம் (பெண்ணுரிமை என்னும் தலைப்பில்) விவாதித்துத் தேவையற்று என்னை வம்புக்கு இழுத்த விமர்சகர்களின் தன்மைக்கேட்டுக்கு என்ன பெயரோ!

அடுத்து, நண்பர் பிரசாத் “படிப்பவர்களில் பெரும்பாலோர் ஒரு கருத்தை எழுதியவரின் கோணத்தில் பார்க்காமல் வேறு திசையில் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அது எழுதுபவரின் எழுத்து நடைக் குற்றமே அன்றிப் படிப்பவரின் குற்றமாகாது.’ என்று கூறியுள்ளது உண்மைதான். ஆனால், நான் ஆணாதிக்கத்தை எதிர்த்து வந்திருப்பவள் / வருகிறவள் என்கிற கோணத்திலேயே நான் எழுதுகிற ஒவ்வொன்றையும் தப்பாக எடை போட்டு, நான் எழுதாதவற்றைக்கூடச் சம்பந்தமே இல்லாமல், ஏற்கெனவே கொண்டுள்ள கணிப்பின் (pre-conveived notion) அடிப்படையில் அன்றோ சிலர் விவாதித்துவிட்டு எழுத்தாளருக்குத்  தன் கருத்தை வாசகர்களுக்குப் புரியவைக்கும் திறன் இல்லை என்று மட்டம் தட்டுகிறார்கள்! இது படிப்பவரின் குற்றமே அன்றோ! கறுப்புக் கண்ணடி யணிந்து பார்த்தால் பார்வை மங்கத்தானே செய்யும்?

‘எனக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்’ என்று நான் சொன்னது நான் “ஆண்களை வெறுப்பவள் அல்லேன்” என்பதைத் தெரிவிக்க மட்டும்தான். என்  “அதி புத்திசாலித் தனத்தை” விளம்பரப்படுத்துவதற்காக அன்று! எனினும் உங்கள் வாதம் வக்கீல்தனமாகவும் பாராட்டும்படியும் உள்ளது. என் பாராட்டுகள், நண்பரே!

கடைசியாக, “தற்பெருமைக்காரி” அல்லது “தலைக்கனம் உள்ளவள்” என்று விமர்சிக்கப்படக் கூடிய ஓர் அறிவிப்பு! தினமணி கட்டுரையைப் படித்துவிட்டு, என் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டறிந்து, மண்ணடி (சென்னை) யிலிருந்து மின்சாதனங்கள் விற்பனையாளர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் தொலைப்பேசியில் சொன்னது:

“அம்மா! எனக்குக் கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறாள். பெண்களைப் பெற்ற தகப்பன்மார்களுக்கு உங்கள் கட்டுரை மிகவும் பிடிக்கும். உங்கள் ஆண்-பெண் நட்புறவு” கட்டுரையைப் பிரதிகள் எடுத்து அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் விநியோகம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *