வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். இதன்வழியே பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)