பல்துறை வித்தகராக விளங்கும் எழுத்தாளர் சாய் குமார், ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் 25 நூல்களை எழுதியுள்ளார். பாடல் பெற்ற தலங்கள், திவ்விய தேசங்கள், புராணத் தலங்கள் என நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு நேரில் சென்று வணங்கியுள்ளார். மற்றவர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, அந்தந்தக் கோவில்களின் தல வரலாற்றுடன், அனைத்து விவரங்களுடன் வழிகாட்டி நூல்களை வெளியிட்டுள்ளார்.

எழுத்துடன் பாடவும் தெரிந்த இவர், ஆயிரம் கச்சேரிகள் செய்துள்ளார். ஆண்டுதோறும் 15 படிகளில் கொலு வைத்துப் புதுமைகள் செய்து வருகிறார். கீபோர்டு வாசிக்கத் தெரிந்தவர். கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றைப் படித்து ஆவணப்படுத்துகிறார். சமஸ்கிருதத்திலும் பட்டயம் பெற்றுள்ளார். சாய் குமாரின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணலின் வழியே வெளிக்கொண்டு வந்துள்ளார், வெ.சுப்ரமணியன். பார்த்து மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *