சி. ஜெயபாரதன், கனடா

இப்போது
உன்னை மூழ்க்கி அமுக்குவது
வெப்ப யுகச் சூரியன் !
விழித்துப் பார் !
தப்ப முடியாது !
மாந்தர்
கப்பம் கட்டணும் !
பூகோளம் முன் சீர்நிலை
மீளாதவாறு
கோளாறாகப் போச்சு !

நீரில்லை
என்று அழுதாய்
நேற்று !
இடிமின்னல்
ஓட்டை உடைத்து உனது
வீட்டை மூழ்க்குது
இப்போது.
வருண பகவான் தான்
கருணையற்றுப்
பொழிகிறான் !

காற்றில்லை
என்று என்மேல் மண்வாரித்
தூற்றினாய் !
சூறாவளி அடித்து
மூச்சை நிறுத்தியது !
தெரிந்துகொள்
மூன்றாம்
கலியுக யுத்தம்,
குருச்சேத்திரப் போர் !

போப்பாண்டவர் படித்த
பைபிள் கூறும்
பிரளயப் பேரழிவு அல்ல !
இயற்கை
எச்சரிக்கை செய்யும்
இச்சிறு காட்சிகள் யாவும்
அச்சமூட்டும்
அசுர ஒத்திகை !

கரிவாயு
வெளி வீச்சுக்கு
வரம்பு,
வரிகள் போடு !
வடிகட்டு !
உருமாற்று !
கரிவாயுவை
இரசாயனத் தொழில்மூலம்
எரிவாயுவாக
மாற்றம் செய்வாய் !
கட்டணம் விதிப்பாய்
கரிவாயுக்கு !
வருமானம்
பேரிடர் கையாள.
பேரழிவு
ஈடு செய்வதற்கு.

பூமியில்
வெப்ப யுகச் சீர்கேடு !
மீளாது
சீர்நிலைக்கு !
மானிடர்
தப்ப முடியாது, அஞ்சேல் !
நானினி வருவேன் !
யுகே யுகே !

==============================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *