கூடங்குள அணுமின்சக்தி ஆலை

சி. ஜெயபாரதன், கனடா

கூடங்குள அணுமின் உலைகள்
கூவத்து நதிக் கரையில்
மேவப் பட்ட
தீவிர மரணப் பீடங்கள் அல்ல!
சிதைந்து போய்ச்
சாம்பலான செர்நோபில்
சமாதி அல்ல !
இந்தியர் வரிப்பண
உப்பைத் தின்று
வளரும்
ஒப்பிலா விஞ்ஞானிகள்
உன்னத பொறித் துறை
நிபுணர்கள் கட்டி
எழுப்பிய
பிரம்மாண்ட மின்சாரப்
பிரமிடுகள் !

ஊரே தீப்பற்றி எரிய
வீணை வாசித்த ரோமாபுரி
நீரோ மன்னன்
எழுப்பிய
கோரக் காலிஸீய அரண் அல்ல!
கூடங்குள அணு உலை மூடிக் கிடந்தால்
நாடு வளம் குன்றும்!
கணினிகள்
மிளகாய்ப் பெட்டிகளாய்
கண்ணீர் சிந்தும்!
மின் விசிறிகள் மூச்சிழக்கும்!
மின்சார மின்றி
சம்சாரம்
மங்கலம் பாடும்!

சினிமாக் கொட்டகை
மாட்டுக்
கொட்டமாய்க்
கொட்டாவி விடும்!
கவச குண்டல மாய்த்
தொங்கும்
செல்லரித்துப் போன
கைபேசிகள்!
மாட்டு வண்டிகள் இழுக்கும்
சாணி யுகம் மீளும்.
காணி நிலத்தில், புற்றுப்
பாம்புகள் படமெடுக்கும்
எரிந்த
சாம்பலி லிருந்து!

Share

Comments

One response to “கூடங்குள அணுமின்சக்தி ஆலை”

  1. https://jayabarathan.wordpress.com/2017/06/29/kudangulam-second-unit/

    இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *