தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சாலையின் மேலே டிஜிட்டல் பலகைகளை வைத்துள்ளதை அண்மையில் கவனித்தேன். வண்டிகள் போகும் வேகத்தில் இவற்றைப் படிக்க இயலாது. பகல் வெளிச்சத்தில் இந்த எழுத்துகள் சரியாகத் தெரியாது. ஓரத்தில் நிறுத்திப் படிக்கலாம். அவசரச் செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க இது ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சாலையிலிருந்து சற்றே திசை திருப்பவும் இடம் உண்டு. இதைப் படிப்பதற்காக வாகனத்தை அந்த இடம் வந்ததும் மெதுவாகச் செலுத்தினாலும் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் வாய்ப்பும் உண்டு. இந்தப் பலகைகள் தேவையா? உங்கள் கருத்தை எழுதுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *