என் ஜன்னலுக்கு அப்பால்

0

பாஸ்கர்

ஒரு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த வண்டி ஓட்டுனர் ஒன்று பெரும் சப்தம் எழுப்பி மிகவும் தொந்தரவு கொடுத்தார்.

என்னால் சட்டென தடம் மாற முடியவில்லை. ஆயினும் இதை தெரிந்தும் அவர் சப்தம் எழுப்பினார்.

இந்த முறை எனது கோபம் உச்சத்திற்கு சென்றது. நான் வழி விடவில்லை. இரண்டு முறை கை காட்டியும் அவர் சப்தம் என்னை மிகவும் பாதித்தது.

இப்போது திரும்பவும் அதே சப்தம்.

ஒரு வேளை மருத்துவ வண்டியோ என திரும்பி பார்த்தால் அது ஒரு பெரிய கார். நான் எப்போதும் போல ஓட்ட அவர் மீண்டும் சப்தம் எழுப்பினார்.

இந்த முறை அவர் என்னை கடக்கும் போது “சார் சைட் ஸ்டாண்ட்” என்றார்.

அப்போது தான் நான் கவனித்தேன். அவர் எழுப்பிய சப்தம் என்னை கவனப்படுத்தவே என புரிந்து கொண்டேன்.

அந்த வண்டி கடக்கும் போது நான் திட்டியது எனக்கே உறைத்தது. நாம் ஒரு விஷயத்தை எப்படி கையாள அது எப்படி எங்கே இட்டு செல்கிறது என்பதற்கு இது சின்ன உதாரணம்.

அனுமான்ம் தவறு என்பதற்கு இந்த நிகழ்வும் சான்று.

வீட்டு வாசலை கடந்தால் எல்லாம் ஞானிகளும், ஆசான்கள் எனக்காவே காத்து கொண்டு இருப்பது போல இருக்கிறது வாழ்க்கை.

எல்லோரும் எனக்கு தகப்பன் சாமி. கடைசி வரை இந்த பலப்பத்தையும் பென்சிலையும் பிடித்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *