இசைக்கவியின் இதயம் – புதிய தொடர் நிகழ்ச்சி

வணக்கம்!

இதோ ஒரு புதிய தொடர் நிகழ்ச்சி!

பல்லாண்டு காலமாக எனக்குப் பாட்டும், கவிதையும் தந்து பராசக்தி என்னைப் பாலித்து வருகிறாள். நானொரு தமிழ்க் கவிஞன் என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் நான் சுமப்பதில்லை.

அவள் தந்த கவிதைகளையும், பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே ஒரு தொடர் நிகழ்ச்சி. மாதம் ஒரு முறை.

என்பால் பேரன்பு கொண்ட இரு நண்பர்கள் இதை எடுத்து நடத்த முன்வந்திருக்கிறார்கள் – ஒருவர் இடம் தந்து, நேரலை ஒளிபரப்பும், யூடியூப் பதிவும் செய்யும் திரு. ராமகிருஷ்ணன், ஆர் கே கன்வென்ஷன் சென்டர். இன்னொருவர், தேசப் பற்றாளர், ஆன்மிகப் பயணி, வியாசர்பாடி திரு. குருமூர்த்தி ஐயா அவர்கள்.

வாருங்களேன்! கவிதையும் பாடல்களும், கொஞ்சம் சிற்றுண்டியும் உங்களுக்காகக் காத்திருக்கும்!

17.01.23, செவ்வாய், மாலை 6.30, ஆர் கே கன்வென்ஷன் சென்டர், லஸ் முனை அருகில், மயிலாப்பூர், சென்னை 600004.

நேரில் வர இயலாதவர்கள் நேரலையில் காண: https://youtu.be/lfoxwaqOV1A  

அன்புடன்,
ரமணன் 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *