சுகமான சுமைகள்
எஸ். நெடுஞ்செழியன்
அவள் …
பள்ளியில் படிக்கும்போது
முதுகில் புத்தகச் சுமை .
பருவம் வந்த போது
மனதில் பல சுமைகள் .
கண்களில் கனவுச் சுமைகள் .
கணவனைக் கைப்பிடித்தபோது
கட்டிலில் அவன் சுமை.
அதற்கு
அவன் தந்தது
வயிற்றில் சுமை.
பத்து மாதம் கழித்து-அதற்குப்
பால் புகட்டும் போது
மடியில் சுமை -அதைத்
தூங்க வைக்கும் போது
தோளில் சுமை .
இடுகாட்டிலும் ……..இவள் வேகும் வரை
இவள் உடல் சுமப்பது
விறகு சுமை .
இறுதி வரை
இவள் ஒரு சுமைதாங்கியே .
அவளுக்கோ
இதுவெல்லாம் … சுகமான சுமைகளே !
nice