சேலத்தில் தீபத் தூண்

அண்ணாகண்ணன்

சேலம், கரிய பெருமாள் மலையின் உச்சியில் உள்ள கரிய பெருமாள் கோவிலுக்கு இன்று சென்றேன். பெருமாள் சந்நதிக்கு நேர் எதிரே தீபத் தூண் இருந்தது. அதன் உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான கிண்ணம் பொருத்தப்பட்டிருந்தது. தீபம் ஏற்ற, பக்கவாட்டில் ஏணிப் படியும் இருந்தது. நெடுங்காலமாகத் தீபம் ஏற்றியதன் அடையாளமாக, எண்ணெய்க் கறைகளும் இருந்தன.

திருப்பரங்குன்றத்தில் இருப்பது எல்லைக்கல் என்போர், இதைக் கவனிக்க வேண்டும். அதே போன்ற தூண், அதே வடிவத்தில், உயரத்தில் பல இடங்களில் அமைந்துள்ளது. இந்தத் தூண், மலை உச்சியில் ஒரே இடத்தில் தான் அமைந்துள்ளது. எல்லை நெடுகிலும் இந்தக் கல்லை நடவில்லை. முக்கியமாக, சேலத்தில் அது தீபத் தூணாகவே பயன்பாட்டில் இருக்கிறது. திக்கெட்டும் காண, திரியில் தீபம் ஏற்றுங்கள். வரலாற்றைத் திரிக்காதீர்கள்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *