பயணம் முடிவதற்குள்…
யுகநிதி, மேட்டுப்பாளையம்

ஒரு
குடிசை வாழ்க்கையில்
அழுகையோடு விழுந்தேன்..
பசியோடு
போராடித்தான்
வாழ்ந்தேன்.. வளர்ந்தேன்..
ஒரு
நிலாக்கால
நள்ளிரவில்
உதயமான எண்ணத்தை
எல்லாப் பொழுதுகளிலும்
அசை போட்டேன்..
அது
காட்டிய பாதையில்
பயணித்தேன்..
தொடர்ந்த துன்பங்களைத்
தூசி தட்டினேன்..
என் பசி நீங்கியது..
பயணம் முடியவில்லை..
முடிவதற்குள்
உணர்வேனா
என்
பிறவியின் ரகசியத்தை..!
