இன்றைய பொருளாதாரமும், காந்தியமும்!

 

பவள சங்கரி

தலையங்கம்

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் காந்தியடிகள் பிறந்தநாளில் அவருடைய கொளகைகளையும், தத்துவங்களையும் நினைவில் கொண்டு அதைப்பற்றி வானளாவ புகழ்ந்து பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். நம்முடைய பண்டமாற்றுக்காக உபயோகிக்கும், ரூபாய்த் தாள்களில் மகாத்மாவின் உருவத்தைப் பதித்தால் மட்டும் போதுமா? ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக அண்ணல் எடுத்த முதல் ஆயுதமே அந்நிய பொருளக்ளின் புறக்கணிப்புதான். ஆனால் இன்றைய சூழ்நிலை என்ன.. அனைத்துப் பொருட்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் தவறில்லை, அன்னிய முதலீடுகளை ஏற்றுக்கொள்வதற்காக எந்த அளவிற்கும் வளைந்து கொடுக்கலாம் என்ற கருத்தில் இருக்கும்போது காந்தியடிகளை நினைவுகூர்வதில் என்ன பலன் வந்துவிடப்போகிறது. அவருடைய பிறந்த நாளை நூற்றாண்டு விழா மற்றும் அதற்கு மேலும் என்று கொண்டாடுகிறோமே தவிர அவருடைய கருத்துக்களை வாழ்க்கையில் ஏற்றுகொண்டுள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம். அன்னிய பொருட்களை வாங்கிக் கொண்டே செல்லச்செல்ல நம்முடைய பொருளாதாரம் கீழே இறங்கிக்கொண்டே அல்லவா இருக்கிறது. ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அன்று வரிகொடாமை இயக்கம் நடத்தி அன்னிய அரசாங்கத்திற்கு தன்னுடைய ஒத்துழையாமையை காட்டினார் அண்ணல். ஆனால் இன்று வரி இல்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு இலாபமாக வரியை கொட்டிக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளாகிய இத்தருணத்திலாவது அவரு்டைய கருத்திற்கு ஏற்ப பொருளாதாரக் கொள்கைகளையும், மற்ற தத்துவங்களையும் கடைபிடித்து அதன்வழி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.   

 

வாழ்க காந்தியம்
வளரட்டும் நம் பொருளாதாரம்.

படத்திற்கு நன்றி:

http://www.encyclopedia.com/topic/Mohandas_Karamchand_Gandhi.aspx

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *