செண்பக ஜெகதீசன்
சுடச்சுடத் தங்கத்தை உருக்கி
சூடிட நகைகள் செய்கிறோம்..
அடித்துக் கல்லைச் செதுக்கி
அழகு சிற்பம் செய்கிறோம்..
அல்லல்தான் வந்து வாழ்வில்
ஆளாக்குகிறது மனிதனை..
அதுதெரியாமல் கிடந்து
அழுது சாகிறாயே மனிதனே…!
படத்துக்கு நன்றி
http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
நல்லதொரு கருத்தை சுருங்கச் சொல்லியிருக்கிறீர்கள். பளிச்சென்று மனதில் பதிகிறது கவிதை வரிகள். மிக்க நன்றி.
“அல்லல்தான் வந்து வாழ்வில்
ஆளாக்குகிறது மனிதனை..
அதுதெரியாமல் கிடந்து
அழுது சாகிறாயே மனிதனே…!”
சூப்பர் வரிகள் ஜெகதீசன். அருமை
திருவாளர்கள், பார்வதி இராமச்சந்திரன், தனுசு ஆகியோரின்
பாராட்டுரைக்கு மிக்க நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…