நாகரிக மனிதனின் வியாதிகள் (டயபடிஸ்- பாகம் 2)

0

செல்வன்

டயபடிசுக்கு என்ன காரணம் என்பது பலவருடமாக 20ம் நூற்ராண்டு மருத்துவர்களை வாட்டி வந்த குழப்பம். உலகில் பல இடங்களில் இருந்து வந்த ஆய்வுகள் பல குழப்பமான முடிவுகளை அளித்தன. உதாரணமாக “வெள்ளை சர்க்கரை உண்பதுதான் டயபடிசுக்கு காரணம். இயற்கையான தானியம், பழங்களில் இருக்கும் சர்க்கரை சத்து டயபடிசுக்கு காரணம் அல்ல” என்பது 20ம் நூற்றாண்டின் மத்தியில் மருத்துவர்களிடம் நிலவிய மூட நம்பிக்கை. இன்றும் கூட பலர் சமைக்காமல் உண்ணும் பழம், காய்கறிகள் மூலம் சர்க்கரை வராது என நம்புகிறார்கள். ஆனால் 60களில் நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினரிடையே நிகழ்த்தபட்ட ஆய்வு இந்த எண்னத்தை தகர்த்தது. மாவோரிகள் பெருமளவில் டயபடிஸ், கொலஸ்டிரால், மாரடைப்பு, தொப்பை ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தனர். பெண்களில் சுமார் 60% பேர் குண்டாக இருந்தனர். அவர்கள் உணவு பெரும்பாலும் நியூசி அரசு ரேஷன் மூலம் கிடைத்த விலைகுறைவான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய உணவுதான் (ரொட்டி, மாவு, பிஸ்கட்டுகள், சீரியல்கள்). கணக்கு போட்டதில் ஒரு மாவோரி வருடம் ஒன்றுக்கு 70 கிலோ சர்க்கரையை இந்த உணவுகள் மூலம் மட்டுமே பெற்றது தெரிய வந்தது. (தினம் 200 கிராம் தானியம்,பழம், உண்டால் வருடம் 70 கிலோ சர்க்கரை நம் உணவிலும் சேரும்.) 

டயபடிஸ் அல்லாத வேறு வியாதிகளை ஆராய்ந்து வந்தவர்களும் அது சர்க்கரையுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக உலகயுத்த காலத்தில் ஹாங்காங் சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்த க்ளீவ் எனும் மருத்துவர் அங்கிருந்த சிறைகைதிகள் ஒருவர் விடாமல் அல்சர் வியாதியால் பாதிக்கபட்டிருந்ததை அறிந்தார்.  யுத்த காலத்தில் மாமிசம் கிடைக்காததால் கைதிகளுக்கு வெறும் அரிசி உணவு மட்டுமே தினம் மூன்று வேளை வழங்கப்பட்டது. யுத்தம் தீவிரமாகி வெள்ளை அரிசி கிடைப்பது நின்று கைதிகளுக்கு விலை குறைந்த மட்டமான பழுப்பு அரிசியும், கம்பு, பார்லி முதலிய தானியங்களும் வழங்கபட்டன. பல சமயங்களில் அவர்களுக்கு உணவு கூட வழங்கபடவில்லை. ஆனால் அதிசயிக்கதக்க முறையில் வெள்ளை அரிசி சப்ளை நின்றவுடன் கைதிகளில் பெரும்பாலானோருக்கு இருந்த அல்சர் மாயமாக மறைந்தது.

யுத்தம் முடிந்து விடுதலை ஆன மருத்துவர் க்ளீவ் அல்சரை பற்றி ஆராய்வதை வாழ்நாள் லட்சியமாக கொன்டார். உலகெங்கும் இருந்த மருத்துவர்களுக்கு கடிதம் எழுதி அல்சர் நோயாளிகளின் உனவை பற்றிய தகவலை திரட்டினார். 1962ம் வருடம் அந்த கடிதங்கலை தொகுத்து நூலாக வெளியிட்டார். அதில் பக்கம், பக்கமாக மருத்துவர்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்: எங்கெங்கு எல்லாம் ரொட்டியும், மாவும், வெள்ளை அரிசியும் மக்களின் பிரதான உணவாக உள்ளதோ அங்கே எல்லாம் பெப்டிக் அல்சர் மக்களை படாதபாடு படுத்துகிறது என்பதும் இந்த உனவுகளை உண்ணாதவர்களுக்கு அல்சர் இல்லை என்பதும்.

ஆக க்ளீவ் தன் நூலில் கூறுவது இதைத்தான். உலகில் பலநாடுகளில் மக்களின் பாரம்பரிய உணவுகள் மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தால் மாவு, மில் அரிசி, சர்க்கரை முதலியவை சேர்க்கபட்டு உருமாற்றம் அடைந்துவிட்டன. (மில் வெள்ளை அரிசி நம் தொன்மை உணவான இட்லியை வெள்ளை நிறமாக்கியதை நினைவில் கொள்ளலாம்). மக்களின் பாரன்ம்பரிய உணவுகள் நாகரிகமடைந்ததும் நாகரிக மனிதனின் வியாதிகளான டயாப்டிஸ், அல்சர் முதலியவை அவர்களையும் வந்து அடைந்துவிட்டன. என்னதான் சத்துமிகுந்த உணவாக இருந்தாலும் அதில் சர்க்கரை, மாவு, ரொட்டி, அரிசி முதலியவற்றை சேர்த்தால்  அதன்பின் அந்த உள்ள வைட்டமின், மினரல், புரதம் எதுவுமே பொருட்டு அல்ல. அத்தகைய உணவு அதன்பின் அம்மக்களை நாகரிக மனிதனின் வியாதிகளுக்கு இட்டுசெல்லும்.

Inline image 1

டயபடிஸ், இதய் அடைப்பு, உடல் பருமன், ரத்த அழுத்தம், பல் வியாதி இவை அனைத்தும் நெருங்கிய தொடர்பு உடையவை. இவைகளை தனி தனியாக ஆராய்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த வியாதிகளுக்கு காரணம் நாகரிக உனவுகள் என்பதையும், அதில் உள்ள சர்க்கரையும் தான் என்பதை கண்டுபிடித்தார்கள். டயபடிஸ் வந்தவர்கள் டயபடிஸ் இல்லாதவர்களை விட இருமடங்கு அதிக விகிதத்தில் மாரடைப்பால் இறந்தார்கள். கிட்னி பழுதானவர்கள் பெருமளவிலானவர்க்கு டயபடிஸ் இருந்தது. பல் சொத்தை விழுந்தவர்கள் பலருக்கு டயாடிஸும், உடல் பருமனும் இருந்தன.

மருத்துவர் ஜாஸ்லின் இதைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறார்

“பல் சொத்தை, ஈறு கெடுதல் ஆகியவை நிகழ்வது ஒருவருக்கு டயபடிஸ் வருவதற்கான முக்கிய அறிகுறி” –

சர்க்கரைசத்து நிரம்பிய அரிசி, கோதுமை உனவுகளை உண்ணும் பெண்கள் பலருக்கும் ரத்தசோகை, மாதவிலக்கு தேதி தவறுதல், பிரசவகால சிக்கல்கள், பிரசவகால மரணங்கள் ஆகியவை அதிகம் இருந்தன. இதே மருத்துவர்களே இல்லாத எஸ்கிமோ பெண்களிடையே இந்த வியாதிகள் எதுவும் இல்லை. எஸ்கிமோக்களிடையே ஐந்து வருடம் வாழ்ந்து ஐந்து வருடமும் வெறும் மாமிசம், மீன் உணவுகலையே உன்ட ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்டெபன்சனின் குறிப்புப்படி எஸ்கிமோ பெண்களுக்கு பிரசவ வலி என மருத் துவருக்கு சேதி வந்து அவர் அவர்கள் வீடுகளுக்கு போவதற்குள் 99% பெண்களுக்கு பிரசவம் ஆகிவிடும். ஒன்று இரண்டு குழந்தைகளை பெற்றே உடல் உருக்குலைந்து போகும் நகர்ப்புற பெண்களை கண்ட ஸ்டெபன்சன் ஏழெட்டு குழந்தைகளை பெற்றும் சர்வசாதாரணமாக கடுமையான வேலைகளை செய்யும் எஸ்கிமோ பெண்களை கண்டு மலைத்து போனதாக எழுதுகிறார்.

எஸ்கிமோ உணவு? வருடம் 11 மாதம் வெறும் மாமிசமும், மீனும் தான். வருடம் ஓரிரு மாதம் மட்டும் அபூர்வமாக கிடைக்ககூடிய காய்கறிகள், பழங்களை கூட அவர்கள் கொழுப்பு நிரம்பிய சீல் எண்னெயில் வதக்கி எடுத்துதான் உண்பார்கள். காரணம் காய்கறிகள் கூட பழுதான உணவுகள் என்பது எஸ்கிமோ நம்பிக்கை!!!!

(தொடரும்..)

செல்வன்
www.holyox.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *