திருடி
-தனுசு
எங்கே சென்றாய்
என்னவளே
என்னை விட்டுசென்றது
ஏனடி?
எங்கே இருக்கிறாய்
கள்ளியே
என்னை பிரிந்து சென்றது
ஏனடி?
நித்தம் பித்தம்
தந்தவளே
இன்று மறைந்து சென்றது
ஏனடி?
இத்தனை அழைத்தும்
மறுப்பவளே
இன்று என்னடி ஆனது
உனக்கு?
பார்
நீ இல்லாத இந்த இரவு
எத்தனை இருட்டு?
யார்
சிறைவைத்து உன்னை
விளையாடிப் பார்ப்பது!
நீயும் ஒத்துக்கொண்டு
ஓடி விளையாட
இது நேரமா?
உன்னைக்காணாமல்
ஒடிந்துவிழும்
என்னுயிரைப் பாரம்மா!
சொல்லாமல்
போன தேவியே
அதனால்
கொல்லாமல் கொல்லுது
என் ஆவியே!
எத்தனை இருளிலும்
என்னால்
உன்னை உணர முடியும்
எத்தனை தொலைவிலும்
என்னால்
உன் திசையை அறிய முடியும்.
ஆனால் இன்று
உணரவோ அறியவோ முடியவில்லை
இதை
யாரிடம் கேட்டும் பயனில்லை.
கேட்டால்
இன்று அமாவாசை என்கிறார்கள்
என் பிரயாசை அறியாதவர்கள்
என்னை காக்க வைத்தது போதும்
சீக்கிரம்
ஓடோடி வா நிலா…..
அருமையான கவிதை சகோதரரே!!. கடைசி வரியில் முத்திரை பதிக்கும் அற்புதக் கவிதைகள் தருவதை தங்களது தனித்துவம் என்றே கருதுகிறேன். பாராட்டிச் சொல்ல வார்த்தைகளில்லை. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.
சொல்லாமல் போன தேவிக்காக
கொல்லாமல்கொல்லும் ஆவியுடன் காத்திருக்கும்
கவிதை நன்று…!
-செண்பக ஜெகதீசன்…
நல்ல கவிதை தனுசு. அனைவரும் ‘சூப்பர் மூன்’ என முழு நிலவை பௌர்ணமி அன்று படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் நேரம் நீங்கள் நிலாவைக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சொல்லாமல்
போன தேவியே
அதனால்
கொல்லாமல் கொல்லுது
என் ஆவியே!
வரிகள் அருமை, எனக்கு(ம்) பிடித்தது.
அன்புடன்
….. தேமொழி
பார்வதி இராமச்சந்திரன். wrote –
///கடைசி வரியில் முத்திரை பதிக்கும் அற்புதக் கவிதைகள் தருவதை தங்களது தனித்துவம்….////
தாங்களின் மனம் நிறைந்த பாராட்டு மட்டற்ற மகிழ்சி. மிக்க நன்றிகள்.
செண்பக ஜெகதீசன்… wrote-
////சொல்லாமல் போன தேவிக்காக…..///
மிகச்சிறந்த கவிஞரான தாங்கள் என் கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.
தேமொழி wrote –
///சொல்லாமல்
போன தேவியே
அதனால்
கொல்லாமல் கொல்லுது
என் ஆவியே!
வரிகள் அருமை, எனக்கு(ம்) பிடித்தது.////
இது போன்று குறிப்பிட்டு சொல்லும் பொழுதுதான் கவிதைகள் எழுதுவதில் இன்னும் ஆர்வம் அதிகமாகிறது. மிக்க நன்றிகள் தேமொழி.