-தனுசு
எங்கே சென்றாய்
என்னவளே
என்னை விட்டுசென்றது
ஏனடி?
எங்கே இருக்கிறாய்
கள்ளியே
என்னை பிரிந்து சென்றது
ஏனடி?
நித்தம் பித்தம்
தந்தவளே
இன்று மறைந்து சென்றது
ஏனடி?
இத்தனை அழைத்தும்
மறுப்பவளே
இன்று என்னடி ஆனது
உனக்கு?
பார்
நீ இல்லாத இந்த இரவு
எத்தனை இருட்டு?
யார்
சிறைவைத்து உன்னை
விளையாடிப் பார்ப்பது!
நீயும் ஒத்துக்கொண்டு
ஓடி விளையாட
இது நேரமா?
உன்னைக்காணாமல்
ஒடிந்துவிழும்
என்னுயிரைப் பாரம்மா!
சொல்லாமல்
போன தேவியே
அதனால்
கொல்லாமல் கொல்லுது
என் ஆவியே!
எத்தனை இருளிலும்
என்னால்
உன்னை உணர முடியும்
எத்தனை தொலைவிலும்
என்னால்
உன் திசையை அறிய முடியும்.
ஆனால் இன்று
உணரவோ அறியவோ முடியவில்லை
இதை
யாரிடம் கேட்டும் பயனில்லை.
கேட்டால்
இன்று அமாவாசை என்கிறார்கள்
என் பிரயாசை அறியாதவர்கள்
என்னை காக்க வைத்தது போதும்
சீக்கிரம்
ஓடோடி வா நிலா…..

Leave a Reply