நான் அறிந்த சிலம்பு – 80
மலர் சபா
புகார்க்காண்டம் – 08. வேனில்காதை
மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்
கட்டுப்பாட்டுடன் இதுகாறும்
தன்னுடன் இருந்த
‘நிறை’ எனும் குணம்
காமத்தின் மிகுதியால்
கட்டவிழ்ந்து போனதால்…..
இணைந்தே இதுகாறும்
தம்முடன் இருந்த
அறுபத்து நான்கு கலைகளும்
தொடர்ந்து தம்முடன் வாராமல் போனதால்…..
கலைகள் அவற்றுள் ஒன்றான
பண்பாடும் அவள் திறன்
அவள்தமக்கே நட்பு மறந்து
உட்பகையாகி நின்று
பிறர் புறங்கூறக் காரணமாய் அமைந்திட்டதே……
இங்ஙனம் மழலை மாறாத
மொழிகள் பலவும்
தமது நாவினால்
சொல்லிக் கொண்டே
மடல் வரைந்தனள் மாதவி.
பசலை படர்ந்த மேனியளாய்
கோவலன் நினைவு மிகுந்து வருந்தும்
மாலைக் காலத்தே
தம் தோழியாம் வசந்தமாலையை
வா என்றழைத்து
“தூய மலர் மாலை போன்ற
இக்கடிதத்தில் யாம் எழுதியவற்றின்
பொருள் அனைத்தும்
கோவலனுக்குப் புரியுமாறு எடுத்தியம்பி
இப்போதே இங்கு அழைத்து வருக” என்றனள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 65 – 71
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html
படத்துக்கு நன்றி
http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05