கோ. ஆலாசியம்
(பெற்றோர் இட்ட பெயர்: ஹாலாஸ்ய சுந்தரம்)
நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறேன்.
கப்பல் கட்டும் துறையில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியளாராக பணி புரிந்து வருகிறேன்.
மகாகவி பாரதியின் மீது தீவிர பற்று கொண்ட நான் தமிழை தொடர்ந்து படித்து வருகிறேன்…
பேரறிவாளர்களும், தமிழறிஞர்களும் வந்து குழுமி தாம் கற்று ஆய்ந்து புரிந்து உணர்ந்த நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த வல்லமையில் எனது இந்தக் கவிதையையும் பதிவு செய்கிறேன்.
எனது வலைப்பூ: http://tamizhvirumbi.blogspot.sg/
ஒட்டிப் பிறந்த யிரட்டயரின் பொருட்டு
முட்டி மோதிக் கொள்வதோ -ஈசனுடுக்கை
தட்டிப் பிறந்த இருவரின் பெயரால்
கட்டிப்பிடித்து ருண்டடித்துக் கொள்வதோ
பாரினி லுயரிய பாரதத்தைப் படைகொண்டு
பிரித்தாளெண்ணிய ஆங்கிலேயன் காலத்தில் -கால்டுவெல்
கூறிய ஆரியத் திராவிட கட்டுக் கதைகளை
கூரியப்புத்தி யிலாய்ந்துப் பொய்யென்றுரைப்பர்
திராவிடனென்றும் திராவிட மொழிகளென்றும் பொய்
பரப்பிய அம்மதப்போதகர் மேலுமு ரைப்பார்
பரந்ததுலகில் திராவிடனென்பான் துரானிய வம்சமென்றெவன்
கறந்ததிவ்விசத்தை பருகியதால் கசந்தோமே
மலர்மன்னன் கூர்ந்து ஆய்ந்துத் தேர்ந்தோர்ந்து
விளம்பியப் புதுநூலதை வாசித்திடினில் -சங்கரன்
விளக்கிய திராவிடனவன் தென்னாட்டானென யாவரும்
விளங்கிடுவது தீர்க்கமென அறிவோமே!
ஒருத்தாயின் முலைகளில் சுரக்கும் அமுதில்
ஒருபுறம் சுரப்பதுயர்வென்றும் மறுபுறம் மாசென்றும்
குறுகிய நோக்கினால் குறிப்பதுப்பொருந்துமோ – அழகின்
முருகுத்தமிழும் வேதமொழியும் இரட்டையரே!
சங்கம் வளர்த்த சான்றோரும் அதில்
அங்கம் வகித்த ஆன்றோரும் ஒரு
பங்கமில்லாத் தமிழோடு வடமொழியும் கற்றாரே
அங்ஙனம்கற்காத் தமிழறிஞர் யாருளரோ
வேதம்பாடிய விண்ணவர் மொழியினை உயர்பாரதம்தந்த
பகவத்கீதையை படித்துணர்ந்து தம்படைப்பில் புகுத்திடாத
தமிழ்காப்பியக் கவியேதும்கண்டவரைக் காண்கிலேன் அவைதாம்
தந்தையர் மொழியென்றுரைப்பதில் தயங்கிளேன்
தமிழ்வேதம் பாடியவள்ளுவனும் தன்னிகரில்லாத் -தண்
டமிழ்க் கவிபாடியக் கம்பனும் -உயர்முத்
தமிழால் கற்பின் கனலியையுல கோரேத்தக்காவியம்
அமிழ்ந்த இளங்கோவும் நமக்குரைத்ததுவே!
பிரிவினைப் பேசுவதொன்றும் அறிவினில் உயர்வாகா
அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்
பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார்
இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!
அறிவெங்குக் கிடைக்கினும் தவம்கொண்டுப் பருகுவது
அறிவுடையார்ச் செய்யும் செயலே -அன்றி
பிரிவு பற்பலப் பேசியதனை மறுப்பது
அறிவாளி களுக்கே அதி லழகே!
இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே – நற்
குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே
‘மனமிருந்தால் மார்க்கமுண்டே’ மண்ணில் வாழ்வோருக்கே
மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!
இது ஒரு சாமான்யனின் தமிழ் கவிதை! அது தரும் கருத்துகள் இந்த மன்றத்திலே இருக்கும் தமிழ்ச் சான்றோர்கள் ஏற்பார்கள் என்பதே எனது நம்பிக்கை. உலகில் உள்ளத் தொன்மையான மொழிகளில் முழுமை பெற்ற இரு செம்மொழிகளுக்கும் எனக்கும் தொடர்பிருக்கிறது என்பது எனது பெருமை. அதே வேளையில் கருவிகளை ஆய்வதைவிட அது கொய்து தந்த கனியை சுவைப்பதிலே தான் உண்மையான இன்பமும் இருக்கிறது என்பதே எனது முடிவும்.
மிக்க நன்றியும் அன்புகலந்த வணக்கங்களும் உரியதாகட்டும்.



Leave a Reply