திருமால் திருப்புகழ் (10)
கிரேசி மோகன்
தனனதன தானதத்த தனனதன தானதத்த
தனனதன தானதத்த….
————————————————————————————————————————–
“மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க
மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
உளமதனில் நானகற்றி -உயர்வாக
அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
நடனமிடு காளியத்து -விடராசா
மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….
————————————————————————————————————————