கிரேசி மோகன்

VISHNU_CLOUDS_by_VISHNU108
தனனதன தானதத்த தனனதன தானதத்த
தனனதன தானதத்த….

————————————————————————————————————————–
“மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க11
மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
உளமதனில் நானகற்றி -உயர்வாக
அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
நடனமிடு காளியத்து -விடராசா
மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….

————————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *