விசாலம்

நடிக்கும் தொழிலும் ஒரு கலை தான் ,ஆதி காலத்திலிருந்தே இசை நாட்டியம் நாடகம் என்று இன்று வரை தொடர்ந்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாடகம் என்றால் எனக்கு உயிர்.

நாடகம் பார்க்கப்போனால் ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசித்துப்பார்ப்பேன்.நான் பார்த்த முதல் நாடகம் திரு மனோஹரின் இலங்கேஸ்வரன் பின் டி கே எஸ் பிரதர்ஸின் இராஜ இராஜ சோழன்,திரு சஹஸ்ரநாமத்தின் பராசக்தி , போலீஸ்காரன் மகள், நாலு வேலி நிலம் ,குலதெய்வம் போன்ற நாடகங்கள் இன்றளவும் என் மனதில் நிற்கின்றன.

நாவப் டிஎஸ் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் 8000 தடவைகள் நாடகங்களை நடத்தினார்கள்.என்று கேள்விப்பட்டேன். நாங்களும் எங்கள் நாடக குழுவுடன் இது போல் நாடகம் நடத்துவோம்.ஆனால் கூட்டம் வரவேண்டுமே என்பதால் சேவாஸ்டேஜ் திரு சஹஸ்ரநாமம் நடிக்கும் ஐந்து நாடகங்கள் நடுவே எங்கள் ஒரு நாடகத்தைப்புகுத்திவிடுவோம். சேவா ஸ்டேஜ் நாடக நடிகர்களுக்கு அந்த ஒரு நாள் ரெஸ்ட். இது பம்பாய் பாரதி கலா மன்றத்தில் நடக்கும்.

பெயர் பெற்ற நடிகை என்றால் அவர்கள் சுதந்திரம் மிகவும் குறைந்து விடுகிறது. அவர் இஷ்டப்படி கடைக்குப்போக முடிவதில்லை, சுதந்திரமாக தெருவில் நின்று அரட்டை அடிக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஒரே கூட்டம் சேர்ந்து விடுகிறது.ஆட்டோகிராப் வாங்க சிலர் முண்டியடிப்பார்கள். அவர் கையைத்தொட சிலர் முயல்வார்கள். ‘அப்பப்பா ஏன் வெளியில் கிளம்பி வந்தோம் ‘ என்ற எண்ணம் அவர்களுக்கு நிச்சியம் தோன்றும். இதுவே வெளியூர் சூட்டிங் இருந்தால் இவ்வளவு சங்கடம் இல்லை. சூட்டிங்க நடக்கும் போது ஒருவிதமான கூட்டம் சேருவதில்லை.
தவிர அந்த நாட்டு மக்களும் ஏதோ சினிமா ஷூட்டிங் போல் இருக்கு என்று தொந்தரவு செய்யாமல் தள்ளி நடந்து போகிறார்கள். இதை நான் லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் பிரிட்ஜ் என்ற இடத்தில் பார்த்தேன். மாதுரி தீஷித்துடன் ஒரு ஹீரோ. நிற்க ஒரு நடனம் ,ஷூட்டிங் . அங்கு ஒரு விதமான தொந்தரவும் இல்லை.கூட்டம் சேரவுமில்லை.இதுவே பம்பாயாக இருந்தால் அவ்வளவுதான்.டிராபிக் ஜாம் ஆகிவிடும்.
பாவம் நடிகை. எங்கு போனாலும் காருக்குள் சிறை.பின் வீடு வந்தால் வீட்டிற்குள் சிறை. இஷ்டப்படி சுதந்திரமாக இருக்க முடியவில்லை..சாதாரண மக்கள் போல் வாழ முடியவில்லை.தவிர தனக்கென்று ஒரு வாழ்க்கை ஸ்டைல் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால் பணம் போதாவிட்டாலும் அதை கடைப்பிடிக்க பின் பணம் போதாமல் மனசோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள். நடிகை மீனா குமாரியின் கடைசி காலம் இது போல் தான் இருந்தது.

நானும் ஒரு நாள் நடிகையாக ஆனேன். அதாவது நடிகை படும் அவஸ்தையை நானும் அனுபவித்தேன். எப்படி தெரியுமா? எங்கள் நாடகம்

பம்பாயில் நடக்க இருந்தது. எப்போதும் சமூக நாடகமாக இருக்கும் ஆகையால் உடைக்குப்பிரச்சனை ஏற்பட்டது இல்லை. ஆனால் அந்தத்தடவை

வள்ளி திருமணம் என்ற நாடகம் எடுத்துக்கொண்டோம்.அதற்காக நம்பி ராஜனுக்கு தனி டிரெஸ் ,வேடனுக்கு தனி டிரெஸ் வள்ளிக்கு பின் குறத்திக்கு என்று ஏகப்பட்ட வேஷம். இதற்காக நாங்கள் நாடக உடை விற்கும் கம்பெனிக்கு கிளம்பினோம். எங்களுக்கு திரு சாந்தாராம் அவர்கள் நல்ல பழக்கம்.அவரது பெண் ஜெயஸ்ரீ எனக்கு நன்றாக தெரியும்.ஆகையால் அவர் மூலம் அவரது கம்பெனியின் வேன் எங்களுக்குக்கிடைத்தது.

ஜவேரி பஜாரையும் தாண்டி இந்த நாடகத்திற்காக வேஷம் ,உடை வாடகைக்குக்கு கொடுக்கும் இடம் இருந்தது. அந்தக்கூட்டத்தில் நான் தான் நல்ல கலர்.அந்தக்காலத்தில் பார்க்க அழகாக இருப்பேன் என்று பலர் சொல்வார்கள். ஹூம் அது அந்தக்காலம். காலம் நமக்கு என்று நிக்குமா என்ன? அந்த ஓட்டத்துடன் நாமும் தான் ஓட வேண்டும். சரி வேனுக்குள் வருவோம் எங்கள் எல்லோருக்கும் இது ஒரு புது அனுபவம் ஏனென்றால் எப்போதும் ஒரிரெண்டு உடைகள் தான் வெளியிலிருந்து வாங்குவது போல் இருக்கும்.ஒன்று போலீஸ். மற்றோன்று சன்யாசி.ஆனால் இந்த நாடகத்திற்கோ எல்லோருக்கும் புது வேஷம்.அவர்கள் உடல் அமைப்புக்குத் தகுந்தாற்போல் உடை வேண்டும் ஆகையால் ஒரு 15 பேர் கிளம்பினோம். நடுவில் சமோசா கடை எங்களை வா வா என்று அழைத்தது. அருகில் பேல் பூரி கடை வேறு சரி இறங்கி சாப்பிட்டு வரலாம் என்று இறங்க நினைத்து கதவைத்திறக்க வாசலில் ஒருவன் எங்களைப்பார்த்து மாராட்டியில் வாங்கோ வாங்கோ பில்ம் ஸ்டார் வராங்க ‘என்று தங்கள் நண்பர்களிடம் கத்தினான்.’ யார் யார் உள்ளே இருக்கா ?” என்று ஒருவன் கேட்க இன்னொருவன் காமினி கௌசில் நளினி ஜய்வந்த மும்தாஜ். பிந்து என்று அடிக்கிக்கொண்டே போனான். நாங்கள் அவர்கள் வந்து ஏதாவது பிரச்சனை செய்யப்போகிறார்களோ என்று பயந்து சமோசாவை வாங்காமலே வேனில் அவசரமாக ஏறிக்கொண்டோம். நான் அவர்கள் போய் விட்டார்களோ என்று சன்னலைச்சற்று திறந்தேன் அவ்வளவு தான் .திரும்பவும் என்னை பெரிய நடிகை என்று எண்ணி அவரவர் சைக்கிளில் எங்களைத்தொடர்ந்தார்கள். டிரெஸ் கம்பெனியும் வந்தது.எப்படி இறங்கி உள்ளே செல்வது? அந்தக்கடை இருக்கும் இடமோ ஒரு சிறிய சந்து.. அந்தச்சந்தை நிரப்பியபடி கூட்டம் சேர்ந்தது. பின் எங்கள் டிரைவர் அந்தக்கடைக்குள் சென்று முதலாளியிடம் நிலமையை விளக்கினார் ,பின் எங்களுக்கென்று போலீஸ் பாதுகாப்பிற்காக வந்தது.நாங்கள் ஒவ்வொருவரும் இறங்கி அவசரமாக கடைக்குள் ஓடினோம் பின் கடைக்காரர் கடையின் ஷட்டரைப்போட்டு மூடிவிட்டார்.

அப்பாடி இப்போது தன் நிம்மதி. அவர்கள் மீதும் தப்பில்லை ஒன்று அவர்கள் வயது.இரண்டாவதாக நாங்கள் வந்த வண்டி டைரக்டர் திரு சாந்தாராம் அவர்களது வண்டியில் நீல் கமல் என்று எழுதி இருந்தது. அந்த வேனைப்பார்த்து நான் ஒரு சினிமா நடிகை என்று எண்ணியிருக்க வேண்டும்.அப்பப்பா நடிகை அல்லாத எனக்கே இந்த ஒரு நாளே இப்படி என்றால் பெயர் பெற்ற புகழ் பெற்ற நடிகையின் நிலைமை. எப்படி இருக்கும் அவர்கள் மூச்சு விட்டால்கூட ஒரு ந்யூஸ் ஆகிவிடும். அவர்கள் வீட்டு நாய் பூனையும் நியூஸ் ஆகிவிடும். பாவம் இப்படி சுதந்திரமில்லாமல் இருக்க வேண்டி இருக்கே என்று நினைத்தேன். என்ன செய்வது பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்பட்டால் எதையாவது தியாகம் செய்யத்தான் வேண்டும்

இப்படியாக நான் ஒரு நாள் நடிகையானேன் ஹா ஹா ஹா இது எப்படி இருக்கு ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *