கிரேசி மோகன்

1rama
தாத்தன தத்த தனந்த தாத்தன தத்த தனந்த
தாத்தன தத்த தனந்த -தனதான….

——————————————————————————————————————–
“சாப்பிடும் சக்தி இழந்து, பேச்சில்பி தற்றல் மிகுந்து Ramana11
மூப்பினில் புத்தி மழுங்க -எமனேள
காப்பிடு பத்னி கலங்க , தீக்கிட மக்கள் நெருங்க
ஆப்பதில்சிக்கு குரங்கின் -கதையாவாய்

கேட்பதை விட்டு ணவின்றி ,மாற்றுடை யற்று, குளிர்ந்த
காற்றினில் வெப்பில் திரிந்த -ரமணேசர்
மூச்சைய டக்கி மடிந்து கூற்றைவி ருப்பில் கலந்து
வேற்றுரு வுற்று விரைந்து -அருணேசர்

கூப்பிட அப்ப திசென்று சேர்த்த சுகத்தி னில்பங்கு
வாய்க்கயெ னக்கு வழங்க -அருள்வாயே
சூர்பகை யுச்சம் விளங்க வேற்படை வெற்பி லெறிந்த
தீக்கண்பி றப்பு குகன்தன் -முறைமாம

சூர்ப்பண கைக்கு வலிந்து மூக்கைய றுத்தவ் விலங்கை
ராக்கத னுக்குள் புகுந்த -அவதார
வீற்றுப டுத்து நிமிர்ந்து ஆற்றடி,வெற்பில் அமைந்த
நூற்றொடு யெட்டில் இலங்கு -பெருமாளே”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *