நாம்தமிழர் கட்சி தமிழக முதல்வருக்கு நடத்திய பாராட்டுவிழா – செய்திகள்
ஜூன் 18, 2011 அன்று சென்னை, சைதாப்பேட்டை தேரடி வீதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக, தமிழக முதல்வருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டமாக இது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் ஷாகுல் ஹமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம், கோட்டை குமார் அய்யநாதன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சில காட்சிகள் :