திருமால் திருப்புகழ் (60)
கிரேசி மோகன்
திருவனந்தபுரம் பத்மநாப பெருமாள்….
————————————————-
தனனதந்த தனனதான தனனதந்த தனனதான
தனனதந்த தனனதான -தனதான….
—————————————————————————-
இருளகந்தை ஒளியும்மூல ஒளிதுலங்கு குகைவிசார
முறைபுகன்ற அருணைவாசி -ரமணேசர்
வழிநடந்து மனதையாளும், புலன்களைந்தின் பிடிபடாத,
சிவனினன்பு சுகவிலாசம் -குடியேற,
மருளஅன்று சிலையைவீசி விஜயன்கொண்ட மனவிசாரம்,
ஒழியசங்கு ஒலிஉலாவு -அருள்கீதை
மொழிபுகன்று, கவுரவாதி படையழிந்து புனிதபூமி
பளுவடங்க ரதம்கடாவு, -விரைவோடு,
அருளவந்து, அலையுமாசை கடல்கடைந்து அமுதஞானம்
அதில்பிறந்து அதனைநானும், -பெறவேணும்.
குறவணங்கு அமரஆனை மணம்புரிந்து கடலிலாடும்
சிவன்மகிழ்ந்த சுருதிபாலன் -முறைமாம.
பொருளுகந்த பழையதோழன், அவலுகந்து தருமதானம்,
புவிவிளங்க மனிதனாக -அவதார,
மலையடர்ந்து வளமையான, மழைபொழிந்து பசுமையான,
திருவனந்த பதுமநாப -பெருமாளே….
———————————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://www.findinsideindia.com/visit-thiruvananthapuram-the-abode-of-lord-vishnu/
http://thulasidhalam.blogspot.in/2009/05/2009-24.html